முகப்பு | தொடக்கம் |
ஆந்தை (குடிஞை, கூகை) |
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
238 |
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த |
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, |
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, |
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் |
|
5 |
காடு முன்னினனே, கள் காமுறுநன்; |
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, |
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே; |
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; |
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; |
|
10 |
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, |
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; |
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற |
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? |
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், |
|
15 |
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் |
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, |
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, |
|
அவல மறு சுழி மறுகலின், |
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
356 |
களரி பரந்து, கள்ளி போகி, |
|
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், |
|
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு |
|
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு; |
|
5 |
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் |
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப, |
|
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து |
|
மன்பதைக்கு எல்லாம் தானாய், |
|
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தாயங் கண்ணனார் பாடியது.
|
359 |
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின், |
|
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு, |
|
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல, |
|
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி, |
|
5 |
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், |
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி, |
|
ஈம விளக்கின் வெருவரப் பேரும் |
|
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்; |
|
நினக்கும் வருதல் வைகல் அற்றே; |
|
10 |
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; |
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும், |
|
நசை வேண்டாது நன்று மொழிந்தும், |
|
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு, |
|
பொலம் படைய மா மயங்கிட, |
|
15 |
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, |
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென, |
|
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், |
|
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே. |
|
திணை அது; துறை பெருங்காஞ்சி.
| |
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.
|
362 |
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த |
|
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, |
|
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, |
|
பொழிலகம் பரந்த பெ................. |
|
5 |
.......................கும விசய வெண் கொடி |
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, |
|
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், |
|
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் |
|
நான்மறைக் குறி .......................... யின் |
|
10 |
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் |
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, |
|
கை பெய்த நீர் கடற் பரப்ப, |
|
ஆம் இருந்த அடை நல்கி, |
|
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் |
|
15 |
வீறு சான......................... நன்றும் |
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், |
|
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் |
|
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், |
|
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, |
|
20 |
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல |
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, |
|
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
|
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
| |
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
|
364 |
வாடா மாலை பாடினி அணிய, |
|
பாணன் சென்னிக் கேணி பூவா |
|
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க, |
|
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி, |
|
5 |
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை |
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப, |
|
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும், |
|
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே! |
|
அரியஆகலும் உரிய, பெரும! |
|
10 |
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் |
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் |
|
கூகைக் கோழி ஆனாத் |
|
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|