முகப்பு | தொடக்கம் |
இதல் |
319 |
பூவல் படுவில் கூவல் தோண்டிய |
|
செங் கண் சில் நீர் பெய்த சீறில் |
|
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி |
|
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; |
|
5 |
படலை முன்றில் சிறு தினை உணங்கல் |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் |
|
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான், |
|
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து |
|
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! |
|
10 |
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி |
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் |
|
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், |
|
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் |
|
பாடினி மாலை அணிய, |
|
15 |
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆலங்குடி வங்கனார் பாடியது.
|
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|