முகப்பு | தொடக்கம் |
ஈசல் (ஈயல்) |
51 |
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், |
|
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; |
|
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு |
|
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, |
|
5 |
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, |
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக் |
|
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே; |
|
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே |
|
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த |
|
10 |
செம் புற்று ஈயல் போல, |
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே! |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
|
119 |
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, |
|
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, |
|
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; |
|
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ |
|
5 |
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, |
பணை கெழு வேந்தரை இறந்தும் |
|
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|