முகப்பு | தொடக்கம் |
காக்கை |
238 |
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த |
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, |
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, |
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் |
|
5 |
காடு முன்னினனே, கள் காமுறுநன்; |
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, |
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே; |
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; |
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; |
|
10 |
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, |
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; |
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற |
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? |
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், |
|
15 |
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் |
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, |
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, |
|
அவல மறு சுழி மறுகலின், |
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
362 |
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த |
|
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, |
|
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, |
|
பொழிலகம் பரந்த பெ................. |
|
5 |
.......................கும விசய வெண் கொடி |
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, |
|
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், |
|
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் |
|
நான்மறைக் குறி .......................... யின் |
|
10 |
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் |
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, |
|
கை பெய்த நீர் கடற் பரப்ப, |
|
ஆம் இருந்த அடை நல்கி, |
|
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் |
|
15 |
வீறு சான......................... நன்றும் |
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், |
|
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் |
|
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், |
|
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, |
|
20 |
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல |
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, |
|
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
|
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
| |
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
|