முகப்பு | தொடக்கம் |
குருவி (குரீஇ, தூக்கணம் குருவி) |
19 |
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, |
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, |
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், |
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! |
|
5 |
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய |
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, |
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் |
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, |
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் |
|
10 |
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, |
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, |
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் |
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; |
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, |
|
15 |
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, |
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, |
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் |
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|