முகப்பு | தொடக்கம் |
கொக்கு |
277 |
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
|
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் |
|
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை |
|
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் |
|
5 |
நோன் கழை துயல்வரும் வெதிரத்து |
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
பூங்கண் உத்திரையார் பாடியது.
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|
398 |
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
|
வகை மாண் நல் இல்........................ |
|
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, |
|
பொய்கைப் பூ முகை மலர, பாணர் |
|
5 |
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, |
|
பரிசிலர் விசையெ |
|
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், |
|
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் |
|
10 |
புலியினம் மடிந்த கல் அளை போல, |
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், |
|
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, |
|
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, |
|
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! |
|
15 |
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என |
என் வரவு அறீஇ, |
|
சிறிதிற்குப் பெரிது உவந்து, |
|
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் |
|
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் |
|
20 |
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, |
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, |
|
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, |
|
யான் உண அருளல் அன்றியும், தான் உண் |
|
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, |
|
25 |
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், |
|
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, |
|
புரையோன் மேனிப் பூத்தசல....................... |
|
முரைசெல அருளியோனே |
|
30 |
........................யருவிப் பாயல் கோவே. |
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
| |
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
|