முகப்பு | தொடக்கம் |
நாரை |
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
209 |
பொய்கை நாரை போர்வில் சேக்கும் |
|
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் |
|
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் |
|
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் |
|
5 |
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் |
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, |
|
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, |
|
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, |
|
10 |
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் |
|
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! |
|
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; |
|
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் |
|
15 |
குறு நணி காண்குவதாக நாளும், |
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, |
|
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் |
|
பெரு வரை அன்ன மார்பின், |
|
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|
354 |
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா |
|
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் |
|
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; |
|
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, |
|
5 |
கயல் ஆர் நாரை உகைத்த வாளை |
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் |
|
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ |
|
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, |
|
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை |
|
10 |
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
...................................................................................... |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
................................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|