முகப்பு | தொடக்கம் |
பருந்து (எருவை) |
3 |
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை |
|
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, |
|
ஏம முரசம் இழுமென முழங்க, |
|
நேமி உய்த்த நேஎ நெஞ்சின், |
|
5 |
தவிரா ஈகை, கவுரியர் மருக! |
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! |
|
பொன் ஓடைப் புகர் அணி நுதல், |
|
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, |
|
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, |
|
10 |
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், |
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, |
|
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் |
|
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! |
|
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; |
|
15 |
பொலங் கழற் கால், புலர் சாந்தின் |
விலங்கு அகன்ற வியல் மார்ப! |
|
ஊர் இல்ல, உயவு அரிய, |
|
நீர் இல்ல, நீள் இடைய, |
|
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், |
|
20 |
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் |
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, |
|
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் |
|
உன்ன மரத்த துன் அருங் கவலை, |
|
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது |
|
25 |
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் |
இன்மை தீர்த்தல் வன்மையானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
|
43 |
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, |
|
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, |
|
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும் |
|
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக் |
|
5 |
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ, |
தன் அகம் புக்க குறு நடைப் புறவின் |
|
தபுதி அஞ்சிச் சீரை புக்க |
|
வரையா ஈகை உரவோன் மருக! |
|
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் |
|
10 |
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல், |
கொடுமர மறவர் பெரும! கடு மான் |
|
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்: |
|
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் |
|
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது |
|
15 |
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி, |
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், |
|
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே; |
|
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் |
|
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என, |
|
20 |
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், |
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள் |
|
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி |
|
எக்கர் இட்ட மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
|
62 |
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது? |
|
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு, |
|
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி, |
|
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் |
|
5 |
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க, |
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து, |
|
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் |
|
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே; |
|
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; |
|
10 |
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம் |
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை, |
|
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர, |
|
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும் |
|
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார், |
|
15 |
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே; |
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, |
|
நாற்ற உணவினோரும் ஆற்ற |
|
அரும் பெறல் உலகம் நிறைய |
|
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே! |
|
திணை தும்பை; துறை தொகை நிலை.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.
|
64 |
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, |
|
செல்லாமோதில் சில் வளை விறலி! |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, |
|
5 |
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் |
குடுமிக் கோமாற் கண்டு, |
|
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
|
150 |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன |
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, |
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் |
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, |
|
5 |
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், |
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, |
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, |
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, |
|
10 |
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே |
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் |
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் |
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், |
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, |
|
15 |
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், |
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, |
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, |
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் |
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, |
|
20 |
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் |
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; |
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; |
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; |
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே |
|
25 |
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி |
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், |
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், |
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
179 |
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, |
|
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை |
|
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர் |
|
விசி பிணி முரசமொடு மண் பல தந்த |
|
5 |
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன், |
படை வேண்டுவழி வாள் உதவியும், |
|
வினை வேண்டுவழி அறிவு உதவியும், |
|
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து |
|
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து, |
|
10 |
தோலா நல் இசை, நாலை கிழவன், |
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த் |
|
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.
|
224 |
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; |
|
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, |
|
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; |
|
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, |
|
5 |
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த |
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, |
|
பருதி உருவின் பல் படைப் புரிசை, |
|
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், |
|
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; |
|
10 |
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: |
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! |
|
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, |
|
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை, |
|
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், |
|
15 |
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் |
கொய்து கட்டு அழித்த வேங்கையின், |
|
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
269 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் |
|
பயிலாது அல்கிய பல் காழ் மாலை |
|
மை இரும் பித்தை பொலியச் சூட்டி, |
|
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் |
|
5 |
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, |
உவலைக் கண்ணித் துடியன் வந்தென, |
|
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது |
|
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி; |
|
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் |
|
10 |
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர், |
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப, |
|
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|
271 |
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த |
|
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, |
|
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், |
|
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, |
|
5 |
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, |
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து, |
|
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் |
|
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! |
|
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொª |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|