முகப்பு | தொடக்கம் |
மயில் (மஞ்ஞை) |
13 |
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே |
|
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, |
|
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், |
|
மறலி அன்ன களிற்று மிசையோனே; |
|
5 |
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், |
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், |
|
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, |
|
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; |
|
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! |
|
10 |
பழன மஞ்ஞை உகுத்த பீலி |
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், |
|
கொழு மீன், விளைந்த கள்ளின், |
|
விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
|
50 |
மாசு அற விசித்த வார்புறு வள்பின் |
|
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை |
|
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், |
|
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, |
|
5 |
குருதி வேட்கை உரு கெழு முரசம் |
மண்ணி வாரா அளவை, எண்ணெய் |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, |
|
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை |
|
10 |
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; |
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் |
|
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென |
|
வீசியோயே; வியலிடம் கமழ, |
|
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது |
|
15 |
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை |
விளங்கக் கேட்ட மாறுகொல் |
|
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
|
56 |
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, |
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; |
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, |
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; |
|
5 |
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, |
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், |
|
மணி மயில் உயரிய மாறா வென்றி, |
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என |
|
ஞாலம் காக்கும் கால முன்பின், |
|
10 |
தோலா நல் இசை, நால்வருள்ளும், |
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; |
|
வலி ஒத்தீயே, வாலியோனை; |
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; |
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; |
|
15 |
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, |
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் |
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் |
|
20 |
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, |
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! |
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் |
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் |
|
தண் கதிர் மதியம் போலவும், |
|
25 |
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
திணை அது; துறை பூவை நிலை.
| |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
60 |
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, |
|
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
உச்சி நின்ற உவவு மதி கண்டு, |
|
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, |
|
5 |
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, |
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல் |
|
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் |
|
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் |
|
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், |
|
10 |
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், |
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் |
|
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே? |
|
திணை அது; துறை குடை மங்கலம்.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
116 |
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் |
|
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், |
|
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் |
|
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, |
|
5 |
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், |
|
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் |
|
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; |
|
நோகோ யானே; தேய்கமா, காலை! |
|
10 |
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், |
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், |
|
கலையும் கொள்ளாவாக, பலவும் |
|
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் |
|
யாணர் அறாஅ வியல் மலை அற்றே |
|
15 |
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை |
பெரிய நறவின், கூர் வேல் பாரியது |
|
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த |
|
வலம் படு தானை வேந்தர் |
|
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
120 |
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் |
|
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, |
|
பூழி மயங்கப் பல உழுது, வித்தி, |
|
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் |
|
5 |
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, |
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, |
|
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, |
|
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, |
|
வாலிதின் விளைந்த புது வரகு அரிய, |
|
10 |
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் |
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, |
|
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் |
|
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, |
|
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு, |
|
15 |
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, |
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ |
|
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை |
|
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் |
|
பாடி ஆனாப் பண்பின் பகைவர் |
|
20 |
ஓடு கழல் கம்பலை கண்ட |
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
127 |
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, |
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், |
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, |
|
5 |
ஈகை அரிய இழை அணி மகளிரொடு |
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; |
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் |
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, |
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய |
|
10 |
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. |
திணை அது; துறை கடைநிலை.
| |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
133 |
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் |
|
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; |
|
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின் |
|
விரை வளர் கூந்தல் வரை வளி உளர, |
|
5 |
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, |
மாரி அன்ன வண்மைத் |
|
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
146 |
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை |
|
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல |
|
நல் நாடு பாட, என்னை நயந்து |
|
5 |
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ |
நல்காமையின் நைவரச் சாஅய், |
|
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை |
|
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, |
|
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, |
|
10 |
தண் கமழ் கோதை புனைய, |
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
|
252 |
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, |
|
தில்லை அன்ன புல்லென் சடையோடு, |
|
அள் இலைத் தாளி கொய்யுமோனே |
|
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் |
|
5 |
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
264 |
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, |
|
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, |
|
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து, |
|
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு |
|
5 |
கறவை தந்து பகைவர் ஓட்டிய |
நெடுந்தகை கழிந்தமை அறியாது, |
|
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே? |
|
திணையும் துறையும் அவை.
| |
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
|
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
344 |
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, |
|
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, |
|
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு, |
|
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ |
|
5 |
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து, |
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ |
|
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, |
|
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி.................. |
|
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொª |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|