முகப்பு | தொடக்கம் |
வாளை |
18 |
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் |
|
பரந்துபட்ட வியல் ஞாலம் |
|
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, |
|
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! |
|
5 |
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய |
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! |
|
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் |
|
பூக் கதூஉம் இன வாளை, |
|
நுண் ஆரல், பரு வரால், |
|
10 |
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; |
வான் உட்கும் வடி நீள் மதில்; |
|
மல்லல் மூதூர் வய வேந்தே! |
|
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், |
|
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, |
|
15 |
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த |
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் |
|
தகுதி கேள், இனி, மிகுதியாள! |
|
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் |
|
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; |
|
20 |
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; |
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; |
|
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு |
|
உடம்பும் உயிரும் படைத்திசினோரே; |
|
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் |
|
25 |
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் |
இறைவன் தாட்கு உதவாதே; அதனால், |
|
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே |
|
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் |
|
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; |
|
30 |
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. |
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
| |
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
|
42 |
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் |
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் |
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை |
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து |
|
5 |
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், |
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; |
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, |
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின் |
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது, |
|
10 |
புலி புறங்காக்கும் குருளை போல, |
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, |
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் |
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் |
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் |
|
15 |
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை |
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், |
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் |
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, |
|
20 |
நில வரை இழிதரும் பல் யாறு போல, |
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; |
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் |
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, |
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
|
திணை வாகை; துறை அரசவாகை.
| |
அவனை இடைக்காடனார் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி |
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
283 |
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, |
|
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் |
|
பௌவ உறை அளவா, |
|
..................................................................... வி மயக்கி, |
|
5 |
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் |
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், |
|
வலம் புரி கோசர் அவைக் களத்தானும், |
|
மன்றுள் என்பது கெட... |
|
...........................................£னே பாங்கற்கு |
|
10 |
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க, |
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர, |
|
தெற்றிப் பாவை திணி மணல் அயரும் |
|
மென் தோள் மகளிர் நன்று புரப்ப, |
|
.....................................................ண்ட பாசிலைக் |
|
15 |
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே. |
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
| |
அடை நெடுங் கல்வியார் பாடியது.
|
287 |
துடி எறியும் புலைய! |
|
எறி கோல் கொள்ளும் இழிசின! |
|
காலம் மாரியின் அம்பு தைப்பினும், |
|
வயல் கெண்டையின் வேல் பிறழினும், |
|
5 |
பொலம் புனை ஓடை அண்ணல் யானை |
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், |
|
ஓடல் செல்லாப் பீடுடையாளர் |
|
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை |
|
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், |
|
10 |
தண்ணடை பெறுதல் யாவது? படினே, |
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், |
|
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் |
|
வம்ப வேந்தன் தானை |
|
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
|
திணை கரந்தை; துறை நீண்மொழி.
| |
சாத்தந்தையார் பாடியது.
|
322 |
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன |
|
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, |
|
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் |
|
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், |
|
5 |
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய |
மன்றில் பாயும் வன் புலத்ததுவே |
|
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், |
|
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் |
|
10 |
கண் படை ஈயா வேலோன் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் கிழார் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
354 |
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா |
|
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் |
|
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; |
|
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, |
|
5 |
கயல் ஆர் நாரை உகைத்த வாளை |
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் |
|
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ |
|
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, |
|
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை |
|
10 |
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|