முகப்பு | தொடக்கம் |
தமிழ்நாட்டின் எல்லை |
6 |
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், |
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், |
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், |
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், |
|
5 |
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் |
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது |
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது, |
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் |
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் |
|
10 |
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! |
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, |
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் |
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, |
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, |
|
15 |
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் |
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, |
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் |
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! |
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த |
|
20 |
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! |
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் |
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! |
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை |
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! |
|
25 |
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய |
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! |
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் |
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும், |
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! |
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|