முகப்பு | தொடக்கம் |
பிரியாணி (ஊன் சோறு) பற்றிய குறிப்பு |
14 |
கடுங் கண்ண கொல் களிற்றால் |
|
காப்பு உடைய எழு முருக்கி, |
|
பொன் இயல் புனை தோட்டியால் |
|
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; |
|
5 |
பார் உடைத்த குண்டு அகழி |
நீர் அழுவ நிவப்புக் குறித்து, |
|
நிமிர் பரிய மா தாங்கவும்; |
|
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் |
|
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; |
|
10 |
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! |
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. |
|
புலவு நாற்றத்த பைந் தடி |
|
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை |
|
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, |
|
15 |
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் |
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு |
|
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு |
|
இரு நிலத்து அன்ன நோன்மை, |
|
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
113 |
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், |
|
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் |
|
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, |
|
நட்டனை மன்னோ, முன்னே; இனியே, |
|
5 |
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, |
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் |
|
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! |
|
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் |
|
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
|