முகப்பு | தொடக்கம் |
யமன், சிவன்,
திருமால், முருகன், பலதேவன்
|
56
|
ஏற்று வலன் உயரிய எரி மருள்
அவிர் சடை,
|
|
மாற்று அருங் கணிச்சி, மணி
மிடற்றோனும்;
|
|
கடல் வளர் புரி வளை புரையும்
மேனி,
|
|
அடல் வெந் நாஞ்சில், பனைக்
கொடியோனும்;
|
|
5
|
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
|
விண் உயர் புள் கொடி, விறல்
வெய்யோனும்,
|
|
மணி மயில் உயரிய மாறா வென்றி,
|
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும்
என
|
|
ஞாலம் காக்கும் கால முன்பின்,
|
|
10
|
தோலா நல் இசை, நால்வருள்ளும்,
|
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ்
சீற்றம்;
|
|
வலி ஒத்தீயே, வாலியோனை;
|
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
|
|
முருகு ஒத்தீயே, முன்னியது
முடித்தலின்;
|
|
15
|
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின்,
யாங்கும்
|
அரியவும் உளவோ, நினக்கே?
அதனால்,
|
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது
ஈயா,
|
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ்
தேறல்
|
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி,
நாளும்
|
|
20
|
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்
சிறந்து,
|
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள்
மாற!
|
|
அம் கண் விசும்பின் ஆர் இருள்
அகற்றும்
|
|
வெங் கதிர்ச் செல்வன்
போலவும், குட திசைத்
|
|
தண் கதிர் மதியம் போலவும்,
|
|
25
|
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!
|
திணை அது; துறை பூவை
நிலை.
|
|
அவனை மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|