முகப்பு | தொடக்கம் |
ஓலை (உறைப்புழி)
பற்றிய குறிப்பு
|
290
|
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே;
சினப் போர்
|
|
இனக் களிற்று யானை, இயல் தேர்க்
குருசில்!
|
|
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை
தந்தை,
|
|
எடுத்து எறி ஞாட்பின் இமையான்,
தச்சன்
|
|
5
|
அடுத்து எறி குறட்டின், நின்று
மாய்ந்தனனே;
|
மறப் புகழ் நிறைந்த
மைந்தினோன் இவனும்,
|
|
உறைப்புழி ஓலை போல,
|
|
மறைக்குவன் பெரும! நிற் குறித்து
வரு வேலே.
|
திணை கரந்தை;
துறை குடிநிலை உரைத்தல்.
|
|
ஒளவையார் பாடியது.
|