முகப்பு | தொடக்கம் |
இராமன், சீதை,
இராவணன், அனுமன்
|
378
|
தென் பரதவர் மிடல் சாய,
|
|
வட வடுகர் வாள் ஓட்டிய,
|
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல்
தடக் கை,
|
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,
|
|
5
|
நல் தார், கள்ளின், சோழன்
கோயில்,
|
புதுப் பிறை அன்ன சுதை சேய்
மாடத்து,
|
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர்
நின்று, என்
|
|
அரிக் கூடு மாக் கிணை இரிய
ஒற்றி,
|
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
|
|
10
|
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல,
|
மேம்படு சிறப்பின் அருங் கல
வெறுக்கை
|
|
தாங்காது பொழிதந்தோனே; அது
கண்டு,
|
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர்
ஒக்கல்,
|
|
விரல் செறி மரபின செவித்
தொடக்குநரும்,
|
|
15
|
செவித் தொடர் மரபின விரல்
செறிக்குநரும்,
|
அரைக்கு அமை மரபின மிடற்று
யாக்குநரும்,
|
|
மிடற்று அமை மரபின அரைக்கு
யாக்குநரும்,
|
|
கடுந் தெறல் இராமனுடன் புணர்
சீதையை
|
|
வலித்தகை அரக்கன் வௌவிய
ஞான்றை,
|
|
20
|
நிலம் சேர் மதர் அணி கண்ட
குரங்கின்
|
செம் முகப் பெருங் கிளை இழைப்
பொலிந்தாஅங்கு,
|
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
|
|
இருங் கிளைத் தலைமை எய்தி,
|
|
அரும்படர் எவ்வம்
உழந்ததன்தலையே.
|
திணை அது; துறை
இயன்மொழி.
|
|
சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி
பசுங் குடையார் பாடியது.
|