புறத்திரட்டில் கண்ட பாடல்கள் |
அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு, கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால்-மெச்சிய தோகை மயில் அன்ன சாயலாய்!-தூற்றுங்கால் ஈகை வகையின் இயல்பு.(206) கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை, பொய்ம்மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,- பொருள் கோடி எய்தல், புகன்று.(207) இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்; அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;- மறத்தேயும் பொய் உரைக்கும் வாய்.(311)
|