வைகொண்ட ஊசி கொற்சேரியின் விற்று எம் இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற்றோ புலை ஆத் தின்னி போந்ததுவே?

என்ற திருக்கோவையாரிலும் (386) காணலாம்.

இந் நூற் செய்யுட்கள் 50. பாயிரச்செய்யுள் ஒன்று. பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், அகப் பொருள் விளக்கஉரைகாரர் முதலியோர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இந் நூல் முழுமைக்கும் பழைய உரையும் துறைக்குறிப்புகளும் உள்ளன.