ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி, ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம் யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத் திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளி என்பான்.