| 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை | ||
| [ வஞ்சிமாநகர்ப்புறத்துச் சமயக்கணக்கர் | ||
| தம்திறம்கேட்ட பாட்டு ] | ||
| நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச் | ||
| சமயக் கணக்கர் தம்திறம் சார்ந்து | ||
| வைதிக மார்க்கத்து அளவை வாதியை | ||
| எய்தினள் எய்திநின் கடைப்பிடி இயம்புஎன, | உரை | |
| 5 | வேத வியாதனும் கிருத கோடியும் | |
| ஏதம்இல் சைமினி எனும்இவ் ஆசிரியர் | ||
| பத்தும் எட்டும் ஆறும் பண்புஉறத் | ||
| தத்தம் வகையால் தாம்பகர்ந் திட்டனர் | உரை | |
| காண்டல் கருதல் உவமம் ஆகமம் | ||
| 10 | ஆண்டைய அருத்தா பத்தியோடு இயல்பு | |
| ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு | ||
| எய்திஉண் டாம்நெறி என்றுஇவை தம்மால் | ||
| பொருளின் உண்மை புலம்கொளல் வேண்டும் | உரை | |
| மருள்இல் காட்சி ஐவகை ஆகும் | ||
| 15 | கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் | |
| நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் | ||
| சுவையும் மெய்யால் ஊறும்எனச் சொன்ன | ||
| இவைஇவை கண்டுகேட்டு உயிர்த்துஉண்டு உற்றுத் | ||
| துக்கமும் சுகமும் எனத்துயக்கு அறஅறிந்து | ||
| 20 | உயிரும் வாயிலும் மனமும்ஊறு இன்றிப் | |
| பயில்ஒளி யொடுபொருள் இடம்பழுது இன்றிச் | ||
| சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது | ||
| கிட்டிய தேச நாமம் சாதி | ||
| குணம்கிரி யையின் அறிவது ஆகும். | உரை | |
| 25 | கருத்துஅள வாவது | |
| குறிக்கொள் அனுமா னத்துஅனு மேயத் | ||
| தகைமை உணரும் தன்மையது ஆகும். | ||
| மூவகை உற்றுஅது பொதுஎச்சம் முதல்ஆம் | ||
| பொதுஎனப் படுவது சாதன சாத்தியம் | உரை | |
| 30 | இவைஅந் நுவயம் இன்றாய் இருந்தும் | |
| கடம்திகழ் யானைக் கானவொலி கேட்டோன் | ||
| உடங்குஎழில் யானைஅங்கு உண்டுஎன உணர்தல் | உரை | |
| எச்சம் என்பது வெள்ளஏ துவினால் | ||
| நிச்சயித்து அத்தலை மழைநிகழ்வு உரைத்தல் | உரை | |
| 35 | முதல்என மொழிவது கருக்கொள் முகில்கண்டு | |
| இதுமழை பெய்யும் எனஇயம் பிடுதல் | உரை | |
| என்னும் ஏதுவின் ஒன்றுமுக் காலம் | தன்னில் ஒன்றில் சார்ந்துஉளது ஆகி | |
| மாண்ட உயிர்முதல் மாசுஇன்று ஆகிக் | ||
| 40 | காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்; | உரை |
| உவமம் ஆவது ஒப்புமை அளவை | ||
| கவய மாஆப் போலும்எனக் கருதல்; | உரை | |
| ஆகம அளவை அறிவன் நூலால் | ||
| போக புவனம் உண்டுஎனப் புலம்கொளல்; | உரை | |
| 45 | அருத்தா பத்தி ஆய்க்குடி கங்கை | |
| இருக்கும் என்றால் கரையில்என்று எண்ணல் | உரை | |
| இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிக்கு | ||
| அயல்ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் | உரை | |
| ஐதிகம் என்பது உலகுஉரை இம்மரத்து | ||
| 50 | எய்தியது ஓர்பேய் உண்டுஎனத் தெளிதல் | உரை |
| அபாவம் என்பது இன்மைஓர் பொருளைத் | ||
| தவாதுஅவ் விடத்துத் தானிலை என்றல் | உரை | |
| மீட்சி என்பது இராமன்வென் றான்என | ||
| மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல் | உரை | |
| 55 | உள்ளநெறி என்பது நாராசத் திரிவில் | |
| கொள்ளத் தகுவது காந்தம்எனக் கூறல் | உரை | |
| எட்டுஉள பிரமா ணாபா சங்கள் | ||
| சுட்டுணர் வொடுதிரி யக்கோடல் ஐயம் | ||
| தேராது தெளிதல் கண்டுண ராமை | ||
| 60 | எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல் | |
| நினைப்புஎன நிகழ்வசுட்டு உணர்வெனப் படுவது | உரை | |
| எனைப்பொருள் உண்மை மாத்திரை காண்டல் | உரை | |
| திரியக் கோடல் ஒன்றைஒன்று என்றல் | ||
| விரிகதிர் இப்பியை வெள்ளிஎன்று உணர்தல் | உரை | |
| 65 | ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா | |
| மையல் தறியோ மகனோ என்றல் | உரை | |
| தேராது தெளிதல் செண்டு வெளியில் | ||
| ஓராது தறியை மகன்என உணர்தல் | உரை | |
| கண்டுண ராமை கடுமாப் புலிஒன்று | ||
| 70 | அண்டலை முதலிய கண்டும்அறி யாமை | உரை |
| இல்வழக்கு என்பது முயல்கோடு ஒப்பன | ||
| சொல்லின்மாத் திரத்தால் கருத்தில் தோன்றல் | உரை | |
| உணர்ந்ததை உணர்தல் உறுபனிக் குத்தீப் | ||
| புணர்ந்திடல் மருந்துஎனப் புலம்கொள நினைத்தல் | உரை | |
| 75 | நினைப்புஎனப் படுவது காரணம் நிகழாது | |
| நினக்குஇவர் தாயும் தந்தையும் என்று | ||
| பிறர்சொலக் கருதல்இப் பெற்றிய அளவைகள். | உரை | |
| பாங்குறும் உலோகா யதமே பௌத்தம் | ||
| சாங்கியம் நையா யிகம்வை சேடிகம் | ||
| 80 | மீமாஞ் சகமாம் சமயஆ சிரியர் | |
| தாம்பிரு கற்பதி சினனே கபிலன் | ||
| அக்க பாதன் கணாதன் சைமினி | ||
| மெய்ப்பிரத் தியஅனு மானம் சாத்தம் | ||
| உவமானம் அருத்தா பத்தி அபாவம் | உரை | |
| 85 | இவையே இப்போது இயன்றுள அளவைகள் | |
| என்றவன் தன்னைவிட்டு, இறைவன் ஈசன்என | ||
| நின்ற சைவ வாதிநேர் படுதலும் | ||
| பரசுநின் தெய்வம் எப்படித்து என்ன | ||
| இருசுட ரோடுஇய மானன்ஐம் பூதம்என்று | ||
| 90 | எட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க் | |
| கட்டிநிற் போனும் கலைஉருவி னோனும் | ||
| படைத்துவிளை யாடும் பண்பி னோனும் | ||
| துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் | ||
| தன்னில் வேறு தான்ஒன்று இலோனும் | ||
| 95 | அன்னோன் இறைவன் ஆகும்என்று உரைத்தனன் | உரை |
| பேர்உலகு எல்லாம் பிரம வாதிஓர் | ||
| தேவன் இட்ட முட்டை என்றனன். | உரை | |
| காதல் கொண்டு கடல்வணன் புராணம் | ||
| ஓதினன் நரணன் காப்புஎன்று உரைத்தனன். | உரை | |
| 100 | கற்பம் கைசந் தம்கால் எண்கண் | |
| தெற்றென் நிருத்தம் செவிசிக் கைமூக்கு | ||
| உற்ற வியாகர ணமுகம் பெற்றுச் | ||
| சார்பின் தோன்றா ஆரண வேதக்கு | ||
| ஆதி அந்தம் இல்லைஅது நெறிஎனும் | ||
| 105 | வேதியன் உரையின் விதியும் கேட்டு | உரை |
| மெய்த்திறம் வழக்குஎன விளம்புகின்ற | ||
| எத்திறத் தினும்இசை யாதுஇவர் உரைஎன | ||
| ஆசீ வகநூல் அறிந்த புராணனைப் | ||
| பேசும்நின் இறையார் நூல்பொருள் யாதுஎன, | உரை | |
| 110 | எல்லைஇல் பொருள்களில் எங்கும்எப் பொழுதும் | |
| புல்லிக் கிடந்து புலப்படு கின்ற | ||
| வரம்புஇல் அறிவன் இறைநூல் பொருள்கள்ஐந்து | ||
| உரம்தரும் உயிரோடு ஒருநால் வகைஅணு | ||
| அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் | ||
| 115 | பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும் | |
| நிலம்நீர் தீகாற்று எனநால் வகையின | ||
| மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும் | ||
| வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் | ||
| அவ்வகை அறிவது உயிரெனப் படுமே. | உரை | |
| 120 | வற்பம் ஆகி உறுநிலம் தாழ்ந்து | |
| சொல்படு சீதத் தொடுசுவை உடைத்தாய் | ||
| இழின்என நிலம்சேர்ந்து ஆழ்வது நீர்தீத் | ||
| தெறுதலும் மேல்சேர் இயல்பும் உடைத்தாம் | ||
| காற்று விலங்கி அசைத்தல் கடன்இவை | உரை | |
| 125 | வேற்றுஇயல்பு எய்தும் விபரீ தத்தால் | |
| ஆதி இல்லாப் பரமா ணுக்கள் | ||
| தீதுஉற்று யாவதும் சிதைவது செய்யா | ||
| புதிதாய்ப் பிறந்துஒன்று ஒன்றில் புகுதா | ||
| முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா | ||
| 130 | ஒன்றிரண் டாகிப் பிளப்பதும் செய்யா | |
| அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா | ||
| உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் | ||
| குலாமலை பிறவாக் கூடும் பலவும் | ||
| பின்னையும் பிரிந்துதம் தன்மைய ஆகும் | ||
| 135 | மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம் | |
| வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும் | ||
| தேயா மதிபோல் செழுநில வரைப்பாம் | உரை | |
| நிறைந்தஇவ் அணுக்கள் பூதமாய் நிகழின் | ||
| குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் | ||
| 140 | ஒன்று முக்கால் அரைகா லாய்உறும் | |
| துன்றும்மிக் கதனால் பெயர்சொலப் படுமே | ||
| இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச் | ||
| சிக்கென் பதுவும் நீராய் இழிவதும் | ||
| தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் | ||
| 145 | ஆய தொழிலை அடைந்திட மாட்டா | உரை |
| ஓர்அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் | ||
| தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் | ||
| மாலைப் போதில் ஒருமயிர் அறியார் | ||
| சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும் | உரை | |
| 150 | கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் | |
| பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் | ||
| பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் | ||
| எனறுஇவ் வாறு பிறப்பினும் மேவிப் | ||
| பண்புஉறு வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர் | ||
| 155 | கழிவெண் பிறப்பில் கலந்துவீடு அணைகுவர் | |
| அழியல் வேண்டார் அதுஉறற் பாலார் | ||
| இதுசெம் போக்கின் இயல்புஇது தப்பும் | ||
| அதுமண் டலம்என்று அறியல் வேண்டும் | உரை | |
| பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் | ||
| 160 | உறும்இடத்து எய்தலும் துக்கசுகம் உறுதலும் | |
| பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் | ||
| கருவில் பட்ட பொழுதே கலக்கும் | ||
| இன்பமும் துன்பமும் இவையும்அணு எனத்தகும் | ||
| முன்உள ஊழே பின்னும்உறு விப்பது | ||
| 165 | மற்கலி நூலின் வகைஇது என்ன, | உரை |
| சொல்தடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு | ||
| நிகண்ட வாதியை நீஉரை நின்னால் | ||
| புகழும் தலைவன்யார் நூல்பொருள் யாவை | ||
| அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் | ||
| 170 | மெய்ப்பட விளம்புஎன, விளம்பல் உறுவோன் | உரை |
| இந்திரர் தொழப்படும் இறைவன்எம் இறைவன் | ||
| தந்த நூல்பொருள் தன்மாத்தி காயமும் | ||
| அதன்மாத்தி காயமும் காலா காயமும் | ||
| தீதுஇல் சீவனும் பரமா ணுக்களும் | ||
| 175 | நல்வினை யும்தீ வினையும்அவ் வினையால் | |
| செய்வுறு பந்தமும் வீடும்இத் திறத்த | உரை | |
| ஆன்ற பொருள்தன் தன்மைய தாயும் | ||
| தோன்றுசார்வு ஒன்றின் தன்மைய தாயும் | ||
| அநித்தமும் நித்தமும் ஆகி நின்று | ||
| 180 | நுனித்த குணத்துஓர் கணத்தின் கண்ணே | |
| தோற்றமும் நிலையும் கேடும் என்னும் | ||
| மாற்றுஅரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் | உரை | |
| நிம்பம் முளைத்து நிகழ்தல் அநித்தியம் | ||
| நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம் | ||
| 185 | பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம் | |
| இயற்றி அப்பயறு அழிதலும் ஏதுத் | உரை | |
| தருமாத்தி காயம் தான்எங்கும் உளதாய்ப் | ||
| பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா | உரை | |
| அப்படித் தாகிய தன்மாத்தி காயமும் | ||
| 190 | எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும் | உரை |
| காலம் கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும் | ||
| ஏலும் கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும் | உரை | |
| ஆக்கும்ஆ காயம் எல்லாப் பொருட்கும் | ||
| பூக்கும்இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் | உரை | |
| 195 | சீவன் உடம்போடு ஒத்துக் கூடித் | |
| தாஇல்சுவை முதலிய புலன்களை நுகரும் | உரை | |
| ஓர்அணு புற்கலம் புறவுரு வாகும் | ||
| சீர்சால் நல்வினை தீவினை அவைசெயும் | ||
| வருவழி இரண்டையும் மாற்றி முன்செய் | ||
| 200 | அருவினைப் பயன்அனு பவித்துஅறுத் திடுதல் | |
| அதுவீடு ஆகும் என்றனன், அவன்பின் | உரை | |
| இதுசாங் கியமதம் என்றுஎடுத்து உரைப்போன் | ||
| தனைஅறிவு அரிதாய்த் தான்முக் குணமாய் | ||
| மனநிகழ்வு இன்றி மாண்புஅமை பொதுவாய் | ||
| 205 | எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம்எனச் | |
| சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து | உரை | |
| மான்என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு | ||
| அதன்கண்ஆ காயம் வெளிப்பட் டதன்கண் | ||
| வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி | ||
| 210 | யானது வெளிப்பட்டு அதன்கண் அப்பின் | |
| தன்மை வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு | ||
| அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு | ||
| ஆர்ப்புஉறு மனத்துஆங் கார விகாரமும் | ||
| ஆகா யத்தில் செவிஒலி விகாரமும் | ||
| 215 | வாயுவில் தொக்கும் ஊறுஎனும் விகாரமும் | |
| அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும் | ||
| தங்கிய அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும் | ||
| நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் | ||
| சொலப்பட்டு இவற்றின் தொக்கு விகாரமாய் | ||
| 220 | வாக்குப் பாணிபாத பாயுருஉபத் தம்என | |
| ஆக்கிய இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த | ||
| பூத விகாரத் தால்மலை மரம்முதல் | ||
| ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து | ||
| வந்த வழியே இவைசென்று அடங்கி | ||
| 225 | அந்தம்இல் பிரளய மாய்இறும் அளவும் | |
| ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியம்ஆம் | உரை | |
| அறிதற்கு எளிதாய் முக்குணம் அன்றிப் | ||
| பொறிஉணர் விக்கும் பொதுவும் அன்றிப் | ||
| எப்பொரு ளும்தோன் றுதற்குஇடம் அன்றி | ||
| 230 | அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் | |
| ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியமாய் | ||
| நின்றுஉள உணர்வாய் நிகழ்தரும் புருடன் | உரை | |
| புலம்ஆர் பொருள்கள் இருபத் தைந்துஉள | ||
| நிலநீர் தீவளி ஆகா யம்மே | ||
| 235 | மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே | |
| உறுசுவை ஒளிஊறு ஓசைநாற் றம்மே | ||
| வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம் | ||
| ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம் | ||
| உயிர்எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச் | ||
| 240 | செயிர்அறச் செப்பிய திறமும் கேட்டு, | உரை |
| வைசே டிகநின் வழக்குஉரை என்னப் | ||
| பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் | ||
| சாமா னியமும் விசேடமும் கூட்டமும் | உரை | |
| ஆம்ஆறு கூறும் அதில்பொருள் என்பது | ||
| 245 | குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப் | உரை |
| பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான் | ||
| ஞாலம்நீர் தீவளி ஆகா யம்திசை | ||
| காலம் ஆன்மா மனம்இவற் றுள்நிலம் | ||
| ஒலிஊறு நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும் | ||
| 250 | பயில்குணம் உடைத்து நின்ற நான்கும் | |
| சுவைமுதல் ஒரோகுணம் அவைகுறைவு உடைய | உரை | |
| ஓசை ஊறு நிறம்நாற் றம்சுவை | ||
| மாசுஇல் பெருமை சிறுமை வன்மை | ||
| மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் | ||
| 255 | என்னும் நீர்மை பக்கம்முதல் அனேகம் | |
| கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும். | உரை | |
| பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு | ||
| உரிய உண்மை தரும்முதல் போதுத்தான் | உரை | |
| போதலும் நிற்றலும் பொதுக்குணம் ஆதலின் | ||
| 260 | சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்மை | உரை |
| ஒன்றுஅணு கூட்டம் குணமும் குணியும்என்று | உரை | |
| ஒன்றிய வாதியும் உரைத்தனன், உடனே | ||
| பூத வாதியைப் புகல்நீ என்னத் | உரை | |
| தாதகிப் பூவும் கட்டியும் இட்டு | ||
| 265 | மற்றும் கூட்ட மதுக்களி பிறந்துஆங்கு | |
| உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் | ||
| அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின் | ||
| வெவ்வேறு பிரியும் பறைஓ சையில்கெடும் | உரை | |
| உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும் | ||
| 270 | உயிர்இல் லாத உணர்வுஇல் பூதமும் | |
| அவ்வப் பூத வழிஅவை பிறக்கும் | ||
| மெய்வகை இதுவே வேறுஉரை விகற்பமும் | ||
| உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே | ||
| கண்கூடு அல்லது கருத்தளவு அழியும் | ||
| 275 | இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே | |
| பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல் | உரை | |
| என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு | ||
| நன்றுஅல ஆயினும் நான்மாறு உரைக்கிலேன் | ||
| பிறந்தமுற் பிறப்பை எய்தப் பெறுதலின் | ||
| 280 | அறிந்தோர் உண்டோ என்றுநக் கிடுதலும் | |
| தெய்வ மயக்கினும் கனாஉறு திறத்தினும் | ||
| மையல் உறுவோர் மனம்வே றாம்வகை | ||
| ஐய அன்றி இல்லையென் றலும்நின் | ||
| தந்தைதா யரைஅனு மானத் தால்அலது | ||
| 285 | இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய் | |
| மெய்உணர்வு இன்றிமெய்ப் பொருள்உணர்வு அரிய | ||
| ஐயம் அல்லதுஇது சொல்லப் பெறாய்என | ||
| உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள்உரைத்து | ||
| ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்குஎன். | உரை | |
|
சமயக்கணக்கர்தம்
திறம் கேட்ட காதை முற்றிற்று.
|
||