27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை | ||
[ வஞ்சிமாநகர்ப்புறத்துச் சமயக்கணக்கர் | ||
தம்திறம்கேட்ட பாட்டு ] | ||
நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச் | ||
சமயக் கணக்கர் தம்திறம் சார்ந்து | ||
வைதிக மார்க்கத்து அளவை வாதியை | ||
எய்தினள் எய்திநின் கடைப்பிடி இயம்புஎன, | உரை | |
5 | வேத வியாதனும் கிருத கோடியும் | |
ஏதம்இல் சைமினி எனும்இவ் ஆசிரியர் | ||
பத்தும் எட்டும் ஆறும் பண்புஉறத் | ||
தத்தம் வகையால் தாம்பகர்ந் திட்டனர் | உரை | |
காண்டல் கருதல் உவமம் ஆகமம் | ||
10 | ஆண்டைய அருத்தா பத்தியோடு இயல்பு | |
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு | ||
எய்திஉண் டாம்நெறி என்றுஇவை தம்மால் | ||
பொருளின் உண்மை புலம்கொளல் வேண்டும் | உரை | |
மருள்இல் காட்சி ஐவகை ஆகும் | ||
15 | கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் | |
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் | ||
சுவையும் மெய்யால் ஊறும்எனச் சொன்ன | ||
இவைஇவை கண்டுகேட்டு உயிர்த்துஉண்டு உற்றுத் | ||
துக்கமும் சுகமும் எனத்துயக்கு அறஅறிந்து | ||
20 | உயிரும் வாயிலும் மனமும்ஊறு இன்றிப் | |
பயில்ஒளி யொடுபொருள் இடம்பழுது இன்றிச் | ||
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது | ||
கிட்டிய தேச நாமம் சாதி | ||
குணம்கிரி யையின் அறிவது ஆகும். | உரை | |
25 | கருத்துஅள வாவது | |
குறிக்கொள் அனுமா னத்துஅனு மேயத் | ||
தகைமை உணரும் தன்மையது ஆகும். | ||
மூவகை உற்றுஅது பொதுஎச்சம் முதல்ஆம் | ||
பொதுஎனப் படுவது சாதன சாத்தியம் | உரை | |
30 | இவைஅந் நுவயம் இன்றாய் இருந்தும் | |
கடம்திகழ் யானைக் கானவொலி கேட்டோன் | ||
உடங்குஎழில் யானைஅங்கு உண்டுஎன உணர்தல் | உரை | |
எச்சம் என்பது வெள்ளஏ துவினால் | ||
நிச்சயித்து அத்தலை மழைநிகழ்வு உரைத்தல் | உரை | |
35 | முதல்என மொழிவது கருக்கொள் முகில்கண்டு | |
இதுமழை பெய்யும் எனஇயம் பிடுதல் | உரை | |
என்னும் ஏதுவின் ஒன்றுமுக் காலம் | தன்னில் ஒன்றில் சார்ந்துஉளது ஆகி | |
மாண்ட உயிர்முதல் மாசுஇன்று ஆகிக் | ||
40 | காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்; | உரை |
உவமம் ஆவது ஒப்புமை அளவை | ||
கவய மாஆப் போலும்எனக் கருதல்; | உரை | |
ஆகம அளவை அறிவன் நூலால் | ||
போக புவனம் உண்டுஎனப் புலம்கொளல்; | உரை | |
45 | அருத்தா பத்தி ஆய்க்குடி கங்கை | |
இருக்கும் என்றால் கரையில்என்று எண்ணல் | உரை | |
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிக்கு | ||
அயல்ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் | உரை | |
ஐதிகம் என்பது உலகுஉரை இம்மரத்து | ||
50 | எய்தியது ஓர்பேய் உண்டுஎனத் தெளிதல் | உரை |
அபாவம் என்பது இன்மைஓர் பொருளைத் | ||
தவாதுஅவ் விடத்துத் தானிலை என்றல் | உரை | |
மீட்சி என்பது இராமன்வென் றான்என | ||
மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல் | உரை | |
55 | உள்ளநெறி என்பது நாராசத் திரிவில் | |
கொள்ளத் தகுவது காந்தம்எனக் கூறல் | உரை | |
எட்டுஉள பிரமா ணாபா சங்கள் | ||
சுட்டுணர் வொடுதிரி யக்கோடல் ஐயம் | ||
தேராது தெளிதல் கண்டுண ராமை | ||
60 | எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல் | |
நினைப்புஎன நிகழ்வசுட்டு உணர்வெனப் படுவது | உரை | |
எனைப்பொருள் உண்மை மாத்திரை காண்டல் | உரை | |
திரியக் கோடல் ஒன்றைஒன்று என்றல் | ||
விரிகதிர் இப்பியை வெள்ளிஎன்று உணர்தல் | உரை | |
65 | ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா | |
மையல் தறியோ மகனோ என்றல் | உரை | |
தேராது தெளிதல் செண்டு வெளியில் | ||
ஓராது தறியை மகன்என உணர்தல் | உரை | |
கண்டுண ராமை கடுமாப் புலிஒன்று | ||
70 | அண்டலை முதலிய கண்டும்அறி யாமை | உரை |
இல்வழக்கு என்பது முயல்கோடு ஒப்பன | ||
சொல்லின்மாத் திரத்தால் கருத்தில் தோன்றல் | உரை | |
உணர்ந்ததை உணர்தல் உறுபனிக் குத்தீப் | ||
புணர்ந்திடல் மருந்துஎனப் புலம்கொள நினைத்தல் | உரை | |
75 | நினைப்புஎனப் படுவது காரணம் நிகழாது | |
நினக்குஇவர் தாயும் தந்தையும் என்று | ||
பிறர்சொலக் கருதல்இப் பெற்றிய அளவைகள். | உரை | |
பாங்குறும் உலோகா யதமே பௌத்தம் | ||
சாங்கியம் நையா யிகம்வை சேடிகம் | ||
80 | மீமாஞ் சகமாம் சமயஆ சிரியர் | |
தாம்பிரு கற்பதி சினனே கபிலன் | ||
அக்க பாதன் கணாதன் சைமினி | ||
மெய்ப்பிரத் தியஅனு மானம் சாத்தம் | ||
உவமானம் அருத்தா பத்தி அபாவம் | உரை | |
85 | இவையே இப்போது இயன்றுள அளவைகள் | |
என்றவன் தன்னைவிட்டு, இறைவன் ஈசன்என | ||
நின்ற சைவ வாதிநேர் படுதலும் | ||
பரசுநின் தெய்வம் எப்படித்து என்ன | ||
இருசுட ரோடுஇய மானன்ஐம் பூதம்என்று | ||
90 | எட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க் | |
கட்டிநிற் போனும் கலைஉருவி னோனும் | ||
படைத்துவிளை யாடும் பண்பி னோனும் | ||
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் | ||
தன்னில் வேறு தான்ஒன்று இலோனும் | ||
95 | அன்னோன் இறைவன் ஆகும்என்று உரைத்தனன் | உரை |
பேர்உலகு எல்லாம் பிரம வாதிஓர் | ||
தேவன் இட்ட முட்டை என்றனன். | உரை | |
காதல் கொண்டு கடல்வணன் புராணம் | ||
ஓதினன் நரணன் காப்புஎன்று உரைத்தனன். | உரை | |
100 | கற்பம் கைசந் தம்கால் எண்கண் | |
தெற்றென் நிருத்தம் செவிசிக் கைமூக்கு | ||
உற்ற வியாகர ணமுகம் பெற்றுச் | ||
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு | ||
ஆதி அந்தம் இல்லைஅது நெறிஎனும் | ||
105 | வேதியன் உரையின் விதியும் கேட்டு | உரை |
மெய்த்திறம் வழக்குஎன விளம்புகின்ற | ||
எத்திறத் தினும்இசை யாதுஇவர் உரைஎன | ||
ஆசீ வகநூல் அறிந்த புராணனைப் | ||
பேசும்நின் இறையார் நூல்பொருள் யாதுஎன, | உரை | |
110 | எல்லைஇல் பொருள்களில் எங்கும்எப் பொழுதும் | |
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற | ||
வரம்புஇல் அறிவன் இறைநூல் பொருள்கள்ஐந்து | ||
உரம்தரும் உயிரோடு ஒருநால் வகைஅணு | ||
அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் | ||
115 | பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும் | |
நிலம்நீர் தீகாற்று எனநால் வகையின | ||
மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும் | ||
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் | ||
அவ்வகை அறிவது உயிரெனப் படுமே. | உரை | |
120 | வற்பம் ஆகி உறுநிலம் தாழ்ந்து | |
சொல்படு சீதத் தொடுசுவை உடைத்தாய் | ||
இழின்என நிலம்சேர்ந்து ஆழ்வது நீர்தீத் | ||
தெறுதலும் மேல்சேர் இயல்பும் உடைத்தாம் | ||
காற்று விலங்கி அசைத்தல் கடன்இவை | உரை | |
125 | வேற்றுஇயல்பு எய்தும் விபரீ தத்தால் | |
ஆதி இல்லாப் பரமா ணுக்கள் | ||
தீதுஉற்று யாவதும் சிதைவது செய்யா | ||
புதிதாய்ப் பிறந்துஒன்று ஒன்றில் புகுதா | ||
முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா | ||
130 | ஒன்றிரண் டாகிப் பிளப்பதும் செய்யா | |
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா | ||
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் | ||
குலாமலை பிறவாக் கூடும் பலவும் | ||
பின்னையும் பிரிந்துதம் தன்மைய ஆகும் | ||
135 | மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம் | |
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும் | ||
தேயா மதிபோல் செழுநில வரைப்பாம் | உரை | |
நிறைந்தஇவ் அணுக்கள் பூதமாய் நிகழின் | ||
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் | ||
140 | ஒன்று முக்கால் அரைகா லாய்உறும் | |
துன்றும்மிக் கதனால் பெயர்சொலப் படுமே | ||
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச் | ||
சிக்கென் பதுவும் நீராய் இழிவதும் | ||
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் | ||
145 | ஆய தொழிலை அடைந்திட மாட்டா | உரை |
ஓர்அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் | ||
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் | ||
மாலைப் போதில் ஒருமயிர் அறியார் | ||
சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும் | உரை | |
150 | கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் | |
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் | ||
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் | ||
எனறுஇவ் வாறு பிறப்பினும் மேவிப் | ||
பண்புஉறு வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர் | ||
155 | கழிவெண் பிறப்பில் கலந்துவீடு அணைகுவர் | |
அழியல் வேண்டார் அதுஉறற் பாலார் | ||
இதுசெம் போக்கின் இயல்புஇது தப்பும் | ||
அதுமண் டலம்என்று அறியல் வேண்டும் | உரை | |
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் | ||
160 | உறும்இடத்து எய்தலும் துக்கசுகம் உறுதலும் | |
பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் | ||
கருவில் பட்ட பொழுதே கலக்கும் | ||
இன்பமும் துன்பமும் இவையும்அணு எனத்தகும் | ||
முன்உள ஊழே பின்னும்உறு விப்பது | ||
165 | மற்கலி நூலின் வகைஇது என்ன, | உரை |
சொல்தடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு | ||
நிகண்ட வாதியை நீஉரை நின்னால் | ||
புகழும் தலைவன்யார் நூல்பொருள் யாவை | ||
அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் | ||
170 | மெய்ப்பட விளம்புஎன, விளம்பல் உறுவோன் | உரை |
இந்திரர் தொழப்படும் இறைவன்எம் இறைவன் | ||
தந்த நூல்பொருள் தன்மாத்தி காயமும் | ||
அதன்மாத்தி காயமும் காலா காயமும் | ||
தீதுஇல் சீவனும் பரமா ணுக்களும் | ||
175 | நல்வினை யும்தீ வினையும்அவ் வினையால் | |
செய்வுறு பந்தமும் வீடும்இத் திறத்த | உரை | |
ஆன்ற பொருள்தன் தன்மைய தாயும் | ||
தோன்றுசார்வு ஒன்றின் தன்மைய தாயும் | ||
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று | ||
180 | நுனித்த குணத்துஓர் கணத்தின் கண்ணே | |
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் | ||
மாற்றுஅரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் | உரை | |
நிம்பம் முளைத்து நிகழ்தல் அநித்தியம் | ||
நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம் | ||
185 | பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம் | |
இயற்றி அப்பயறு அழிதலும் ஏதுத் | உரை | |
தருமாத்தி காயம் தான்எங்கும் உளதாய்ப் | ||
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா | உரை | |
அப்படித் தாகிய தன்மாத்தி காயமும் | ||
190 | எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும் | உரை |
காலம் கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும் | ||
ஏலும் கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும் | உரை | |
ஆக்கும்ஆ காயம் எல்லாப் பொருட்கும் | ||
பூக்கும்இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் | உரை | |
195 | சீவன் உடம்போடு ஒத்துக் கூடித் | |
தாஇல்சுவை முதலிய புலன்களை நுகரும் | உரை | |
ஓர்அணு புற்கலம் புறவுரு வாகும் | ||
சீர்சால் நல்வினை தீவினை அவைசெயும் | ||
வருவழி இரண்டையும் மாற்றி முன்செய் | ||
200 | அருவினைப் பயன்அனு பவித்துஅறுத் திடுதல் | |
அதுவீடு ஆகும் என்றனன், அவன்பின் | உரை | |
இதுசாங் கியமதம் என்றுஎடுத்து உரைப்போன் | ||
தனைஅறிவு அரிதாய்த் தான்முக் குணமாய் | ||
மனநிகழ்வு இன்றி மாண்புஅமை பொதுவாய் | ||
205 | எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம்எனச் | |
சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து | உரை | |
மான்என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு | ||
அதன்கண்ஆ காயம் வெளிப்பட் டதன்கண் | ||
வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி | ||
210 | யானது வெளிப்பட்டு அதன்கண் அப்பின் | |
தன்மை வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு | ||
அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு | ||
ஆர்ப்புஉறு மனத்துஆங் கார விகாரமும் | ||
ஆகா யத்தில் செவிஒலி விகாரமும் | ||
215 | வாயுவில் தொக்கும் ஊறுஎனும் விகாரமும் | |
அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும் | ||
தங்கிய அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும் | ||
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் | ||
சொலப்பட்டு இவற்றின் தொக்கு விகாரமாய் | ||
220 | வாக்குப் பாணிபாத பாயுருஉபத் தம்என | |
ஆக்கிய இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த | ||
பூத விகாரத் தால்மலை மரம்முதல் | ||
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து | ||
வந்த வழியே இவைசென்று அடங்கி | ||
225 | அந்தம்இல் பிரளய மாய்இறும் அளவும் | |
ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியம்ஆம் | உரை | |
அறிதற்கு எளிதாய் முக்குணம் அன்றிப் | ||
பொறிஉணர் விக்கும் பொதுவும் அன்றிப் | ||
எப்பொரு ளும்தோன் றுதற்குஇடம் அன்றி | ||
230 | அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் | |
ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியமாய் | ||
நின்றுஉள உணர்வாய் நிகழ்தரும் புருடன் | உரை | |
புலம்ஆர் பொருள்கள் இருபத் தைந்துஉள | ||
நிலநீர் தீவளி ஆகா யம்மே | ||
235 | மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே | |
உறுசுவை ஒளிஊறு ஓசைநாற் றம்மே | ||
வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம் | ||
ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம் | ||
உயிர்எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச் | ||
240 | செயிர்அறச் செப்பிய திறமும் கேட்டு, | உரை |
வைசே டிகநின் வழக்குஉரை என்னப் | ||
பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் | ||
சாமா னியமும் விசேடமும் கூட்டமும் | உரை | |
ஆம்ஆறு கூறும் அதில்பொருள் என்பது | ||
245 | குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப் | உரை |
பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான் | ||
ஞாலம்நீர் தீவளி ஆகா யம்திசை | ||
காலம் ஆன்மா மனம்இவற் றுள்நிலம் | ||
ஒலிஊறு நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும் | ||
250 | பயில்குணம் உடைத்து நின்ற நான்கும் | |
சுவைமுதல் ஒரோகுணம் அவைகுறைவு உடைய | உரை | |
ஓசை ஊறு நிறம்நாற் றம்சுவை | ||
மாசுஇல் பெருமை சிறுமை வன்மை | ||
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் | ||
255 | என்னும் நீர்மை பக்கம்முதல் அனேகம் | |
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும். | உரை | |
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு | ||
உரிய உண்மை தரும்முதல் போதுத்தான் | உரை | |
போதலும் நிற்றலும் பொதுக்குணம் ஆதலின் | ||
260 | சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்மை | உரை |
ஒன்றுஅணு கூட்டம் குணமும் குணியும்என்று | உரை | |
ஒன்றிய வாதியும் உரைத்தனன், உடனே | ||
பூத வாதியைப் புகல்நீ என்னத் | உரை | |
தாதகிப் பூவும் கட்டியும் இட்டு | ||
265 | மற்றும் கூட்ட மதுக்களி பிறந்துஆங்கு | |
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் | ||
அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின் | ||
வெவ்வேறு பிரியும் பறைஓ சையில்கெடும் | உரை | |
உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும் | ||
270 | உயிர்இல் லாத உணர்வுஇல் பூதமும் | |
அவ்வப் பூத வழிஅவை பிறக்கும் | ||
மெய்வகை இதுவே வேறுஉரை விகற்பமும் | ||
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே | ||
கண்கூடு அல்லது கருத்தளவு அழியும் | ||
275 | இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே | |
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல் | உரை | |
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு | ||
நன்றுஅல ஆயினும் நான்மாறு உரைக்கிலேன் | ||
பிறந்தமுற் பிறப்பை எய்தப் பெறுதலின் | ||
280 | அறிந்தோர் உண்டோ என்றுநக் கிடுதலும் | |
தெய்வ மயக்கினும் கனாஉறு திறத்தினும் | ||
மையல் உறுவோர் மனம்வே றாம்வகை | ||
ஐய அன்றி இல்லையென் றலும்நின் | ||
தந்தைதா யரைஅனு மானத் தால்அலது | ||
285 | இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய் | |
மெய்உணர்வு இன்றிமெய்ப் பொருள்உணர்வு அரிய | ||
ஐயம் அல்லதுஇது சொல்லப் பெறாய்என | ||
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள்உரைத்து | ||
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்குஎன். | உரை | |
சமயக்கணக்கர்தம்
திறம் கேட்ட காதை முற்றிற்று.
|
||