|
பதிகம் |
|
|
||
|
*[ கதைபொதிபாட்டு] |
|
|
||
|
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து |
|
|
விளங்குஒளி மேனி விரிசடை யாட்டி |
|
|
பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித் |
|
|
தென்திசைப் பெயர்ந்தஇத் தீவத் தெய்வதம் |
|
5
|
சாகைச் சம்பு தன்கீழ் நின்று |
|
|
|
|
|
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு |
|
|
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற |
|
|
சம்பு என்பாள் சம்பா பதியினள |
உரை |
|
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் |
|
10
|
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட |
|
|
|
|
|
அமர முனிவன் அகத்தியன் தனாது |
|
|
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை |
|
|
செங்குணக்கு ஒழுகிய அச்சம்பா பதிஅயல் |
|
|
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற, |
உரை |
15
|
ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் |
|
|
||
|
ஓங்குநீர்ப் பாவையை உவந்துஎதிர் கொண்டு ஆங்கு |
|
|
ஆணு விசும்பின் ஆகாய கங்கை |
|
|
வேணவாத் தீர்த்த விளக்கே வாஎன, |
|
|
பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு |
|
20
|
அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள |
|
|
|
|
|
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்குஎனப |
|
|
பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய |
உரை |
|
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி |
|
|
கோள்நிலை திரிந்து கோடை நீடினும |
|
25
|
தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை |
|
|
||
|
தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி |
|
|
கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து |
|
|
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் |
|
|
செம்மலர் முதியோன் செய்த அந்நாள் |
|
30
|
|
|
|
என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர் |
|
|
நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியஎன |
|
|
இருபால் பெயரிய உருகெழு மூதூர் |
|
|
ஒருநூறு வேள்வி உரவோன் தனக்குப |
உரை |
|
பெருவிழா அறைந்ததும், பெருகியது அலர்எனச |
|
35
|
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான |
|
|
|
|
|
வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும், |
|
|
மணிமே கலைதான் மாமலர் கொய்ய |
|
|
அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும |
|
|
ஆங்குஅப் பூம்பொழில் அரசிளங் குமரனைப | |
40
|
பாங்கில் கண்டுஅவள் பளிக்கறை புக்கதும |
உரை |
|
|
|
|
பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன |
|
|
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின |
|
|
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும |
|
|
மணிமே கலையைமணி பல்லவத்து உய்த்ததும், |
|
45
|
உவவன மருங்கின்அவ் வுரைசால் தெய்வதம |
|
|
|
|
|
சுதமதி தன்னைத் துயில்எடுப் பியதூஉம |
|
|
ஆங்குஅத் தீவகத்து ஆயிழை நல்லாள் |
|
|
தான்துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும |
உரை |
|
உழந்தோள் ஆங்கண்ஓர் ஒளிமணிப் பீடிகைப |
|
50
|
பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும், |
|
|
|
|
|
உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்ற |
|
|
மனம்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும |
|
|
தீப திலகை செவ்வனம் தோன்ற |
|
|
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும், |
|
55
|
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரோடு |
|
|
|
|
|
யாப்புஉறு மாதவத்து அறவணர்த் தொழுததும், |
|
|
அறவண அடிகள் ஆபுத் திரன்திறம், |
|
|
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும, |
உரை |
|
அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்திறம |
|
60
|
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும |
|
|
|
|
|
மற்றுஅப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப் |
|
|
பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும், |
|
|
பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில் |
|
|
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும், |
|
65
|
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று |
|
|
|
|
|
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும், |
|
|
|
|
|
அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே |
உரை |
|
கொங்குஅலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும், |
|
70
|
அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன |
|
|
|
|
|
வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி |
|
|
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம், |
|
|
அறம்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும், |
|
|
காயசண் டிகைஎன விஞ்சைக் காஞ்சனன |
|
75
|
ஆயிழை தன்னை அகலாது அணுகலும், |
|
|
|
|
|
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை |
|
|
மைந்துஉடை வாளில் தப்பிய வண்ணமும், |
|
|
ஐஅரி உண்கண் அவன்துயர் பொறாஅள் |
உரை |
|
தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும், |
|
80
|
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் |
|
|
|
|
|
சிறைசெய் கென்றதும் சிறைவீடு செய்ததும், |
|
|
நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு |
|
|
ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும் |
|
|
ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி |
|
85
|
ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும், |
|
|
உற்றவள் ஆங்குஓர் உயர்ந்தவன் வடிவாய்ப் |
|
|
பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும், |
|
|
நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச் |
|
|
சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும், |
|
|
ஆங்குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து |
|
90
|
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும், |
உரை |
|
|
|
|
புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து |
|
|
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும், |
|
|
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் |
|
|
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும், |
|
95
|
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப |
|
|
|
|
|
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் |
|
|
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு |
|
|
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என். |
உரை |
|
|
|
|
பதிகம் முற்றிற்று. |
|
|
|
|
1
|
அரியேறு......ன் னுயர்த்த வாதியான் வண்டின் |
|
|
புரியேறும் போதி நிழற்கீழ்ப் - பெரியோன் |
|
|
அடித்தா மரைமலரை யன்போடுஞ் சென்று |
|
|
பிடித்தார் பிறவார் பெயர்ந்து. |
|
|
|
|
2
|
பூத்தபுனற் பூம்பொய்கைப் பூம்புகார் மாதவிக்கு |
|
|
வாய்த்த மணிமே கலைதுறவைச் - சாத்தன் |
|
|
மணிமே கலை.......... |
|
|
................. |
|