கடவுள் வாழ்த்து  

1.முன்தான் பெருமைக்கண் நின்றான்
     முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்
     தனக்கு என்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே
     உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன்தாள்
     சரண் நாங்களே.