xxxiv

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேல்திகழ்வானைக், கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை, வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற, பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.                                        3

குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை, வண்ட லம்புமலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக், கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற, கண்டம் நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.                                        4

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை, அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றைஅவை அங்கம்வல் லானை, எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற, நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.                                        5

திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும், சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை, மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற, கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.                                                         6

விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை, நண்ணி னார்க்கென்றும் நல்லவன் தன்னை நாளும் நாம்உகக் கின்றபி  ரcனை, எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற, கண்ணும் மூன்றுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே.                               7

சிந்தித் தென்றும்நி னைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழஞ்சிவன் தன்னைப், பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலொ டான்அஞ்சும் ஆட்டுகந் தானை, அந்தம் இல்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற, கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.                                                  8

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை, நிரம்பிய தக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப், பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற, கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.    9

எள்கல் இன்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல், உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட, கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10