|  |  | 
| திருநாவுக்கரசர் | 
| திருஏகாதச மாலை | 
| பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி | 
| பரசுநா வரசான பரமகா ரணஈசன் | 
| அதிகைமா நகர்மேவி அருளினா லமண்மூடர் | 
| அவர்செய்வாதைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின் | 
| நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை | 
| நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால | 
| மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம் | 
| உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. | 
| -தி.11 நம்பியாண்டார் நம்பி | 
|  |  |