வாழ்த்து |
| வையம் நீடுக மாமழை மன்னுக |
| மெய் விரும்பிய அன்பர் விளங்குக |
| சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக |
| தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே. |
|
-பெரிய புராணம். |
| வான்முகில் வழாது பெய்க |
மலிவளம் சுரக்க மன்னன் |
| கோன்முறை அரசு செய்க |
குறைவிலாது உயிர்கள் வாழ்க |
| நான்மறை அறங்கள் ஓங்க |
நற்றவம் வேள்வி மல்க |
| மேன்மைகொள் சைவ நீதி |
விளங்குக உலக மெல்லாம். |
|
-கந்தபுராணம். |
| மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் |
| பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் |
| நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் |
| புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. |
|
-திருவிளையாடற் புராணம். |
| திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி |
சேரும்நின்றன் |
| மருவார் மரபும் திருநீறும் கண்டியும் |
வாழ்கஅருட் |
| குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற் |
கோநிரைகள் |
| தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த |
தேசிகனே. |
|
-ஆதீன அருள் நூல். |