|  | 
| வாழ்த்து | 
| வையம் நீடுக மாமழை மன்னுக | 
| மெய் விரும்பிய அன்பர் விளங்குக | 
| சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக | 
| தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே. | 
| -பெரிய புராணம். | 
| வான்முகில் வழாது பெய்க | 
| மலிவளம் சுரக்க மன்னன் | 
| கோன்முறை அரசு செய்க | 
| குறைவிலாது உயிர்கள் வாழ்க | 
| நான்மறை அறங்கள் ஓங்க | 
| நற்றவம் வேள்வி மல்க | 
| மேன்மைகொள் சைவ நீதி | 
| விளங்குக உலக மெல்லாம். | 
| -கந்தபுராணம். | 
| மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் | 
| பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் | 
| நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் | 
| புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. | 
| -திருவிளையாடற் புராணம். | 
| திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி | 
| சேரும்நின்றன் | 
| மருவார் மரபும் திருநீறும் கண்டியும் | 
| வாழ்கஅருட் | 
| குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற் | 
| கோநிரைகள் | 
| தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த | 
| தேசிகனே. | 
| -ஆதீன அருள் நூல். | 
|  |  |