| பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி |
|
பரசுநா வரசான பரமகா ரணஈசன் |
| அதிகைமா நகர்மேவி அருளினா லமண்மூடர் |
|
அவர்செய்வாதைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின் |
|
நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை |
|
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால |
|
மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம் |
|
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. |
|
-தி.11 நம்பியாண்டார் நம்பி |