வாழ்த்து
வையம் நீடுக மாமழை மன்னுக |
மெய் விரும்பிய அன்பர் விளங்குக |
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக |
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே. |
-பெரிய புராணம். |
|
வான்முகில் வழாது பெய்க |
|
மலிவளம் சுரக்க மன்னன் |
|
கோன்முறை அரசு செய்க | |
குறைவிலாது உயிர்கள் வாழ்க |
| நான்மறை அறங்கள் ஓங்க |
|
நற்றவம் வேள்வி மல்க |
| மேன்மைகொள் சைவ நீதி |
|
விளங்குக உலக மெல்லாம். |
-கந்தபுராணம். |
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் |
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் |
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் |
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. |
-திருவிளையாடற் புராணம்.
|
|
திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி |
|
சேரும்நின்றன் |
| மருவார் மரபும் திருநீறும் கண்டியும் |
|
வாழ்கஅருட் |
| குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற் |
|
கோநிரைகள் |
| தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த |
|
தேசிகனே. |
-ஆதீன அருள் நூல். |
| |