மன்னனுக்கு நம்பிக்கு 
 மறையவர்மூ வாயிரவர் 
 பன்னரிய திருத்தொண்டர் பலதுறையோர்க் குங்கேட்க 
 வின்னருண்முன் வியந்துரைத்த விவண்முதலா விசைத்தவிசை 
 தென்னிலமேன் மிகத்தோன்றத் திருவருளாற் றோன்றியதாம்.  | 
 34 | 
 
  
 |   | 
   | 
 
  
 சொன்னட்ட பாடைக்குத் 
 தொகையெட்டுக் கட்டளையா; 
 மின்னிசையாற் றருந்தக்க ராகத்தேழ் கட்டளையாம்;  
 பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதா; 
 முன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார்.  | 
 35 | 
 
  
 |   | 
   | 
 
  
 மேவுகுறிஞ் 
 சிக்கஞ்சு; வியாழக்குறிஞ் சிக்காறு 
 பாவுபுகழ் மேகராகக் குறிஞ்சிப்பா லிரண்டு; 
 தேவுவந்த விந்தளத்தின் செய்திக்கு நான்; கினிய 
 தாவில்புகழ்க் காமரத்தின் றன்மைதனக் கிரண்டமைத்தார்.  | 
 36 | 
 
  
 |   | 
   | 
 
  
 காந்தார 
 மாகிய பியந்தையாங் கட்டளைக்கு 
 வாய்ந்தவகை மூன்றாக்கி, வன்னட்ட ராகத்திற் 
 கேய்ந்தவகை யிரண்டாக்கிச், செவ்வழியொன் றாக்கி யிசைக் 
 காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்.  | 
 37 | 
 
  
 |   | 
   | 
 
  
 கொல்லிக்கு 
 நாலாக்கிக், கவுசிகத்துக் கூறும்வகை 
 சொல்லிலிரண் டாக்கி, மிகு தூங்கிசைநேர் பஞ்சமத்திற் 
 கொல்லையினி லொன்றாக்கிச், சாதாரிக் கொன்பதாப், 
 புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார்.  | 
 38 | 
 
  
 |   | 
   | 
 
  
 அந்தாளிக் 
 கொன்றாக்கி, வாகீச ரருந்தமிழின் 
 முந்தாய பலதமிழுக் கொன்றொன்றா மொழிவித்து, 
 நந்தாத நேரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண், 
 டுந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்.  
  | 
 39 | 
 
  
 |   | 
   | 
 
  
 தாண்டகமாம் 
 பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங் 
 காண்டகையார் தடுத்தாண்ட வையரரு டுய்யமுறைக் 
 கீண்டிசைசேரிந்தளத்துக் கிரண்டாக வெடுத்துரைத்து, 
 நீண்டதக்க ராகத்துக் கிரண்டாக நிகழ்வித்தார்.  | 
 40 | 
 
  
 |   | 
   | 
 
  
  கூறரிய நட்டரா கத்திரண்டு, கொல்லிக்கு 
 வேறுவகை மூன்றாக, மிகுந்தபழம் பஞ்சுரத்துக் 
 கேறும்வகை யிரண்டாக்கி, யின்னிசைதேர் தக்கேசிப் 
 பேறிசையா றாக்கி, யதிற் காந்தாரம் பிரித்திரண்டாம்.  | 
 41 | 
 
  
 |   | 
   | 
 
  
 ஒன்றாகுங் 
 காந்தார பஞ்சமத்துக்; கோரிரண்டா 
 நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின் றுரைக்கிற் 
 குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங்; கூறுமிசை 
 யொன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற்றினார்.  | 
 42 | 
 
  
 |   | 
   | 
 
 
 உற்றவிசைக் 
 குறிஞ்சிக்கோரிரண்டாக வகுத்தமைத்துப், 
 பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக், கவுசிகப்பாற் 
 நூற்றவிசை யிரண்டாக்கித், தூயவிசைப் பஞ்சமத்துக் 
 கற்றவிசை யொன்றாக்கி, யரனருளால் விரித்தமைத்தார்.  
  | 
 43 |