முகப்பு

தொடக்கம்


ஐங்கணைக்
கிழவன்
- தாமரை, மா, முல்லை, அசோகு, நீலோற்பலம்,
ஆகிய ஐந்து பூவையும் தனக்கு அம்பாகக்
கொண்ட மன்மதன்
ஐது - அழகு
ஐந்தரு - வானுலகிலுள்ள கற்பகம், அரி சந்தனம்,
பாரிசாதம், மந்தாரம், சந்தானம், என்ற ஐந்து
மரங்கள்
ஐந்தருக் கடவுள் - இந்திரன்
ஐந்திணை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
ஆகிய ஐவகை நிலப் பகுப்பு
ஐந்தினில் - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான், என்னும் ஐந்திடங்களில்
ஐந்து அடுக்கிய
ஆறு ஐந்நூறு
- ஐந்தால் பெருக்கிய மூவாயிரம், அதாவது
பதினையாயிரம்
ஐந்து அமர்
கதுப்பு
- கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள்,
என்ற ஐவகைப் பகுப்பாகிய கூந்தல்
ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,
அருளல்
ஐம்பகை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்னும்
ஐம்புலன்கள் தீய வழியில் செலுவதாலாகிய
பகை
ஐம்பதிற்று இரட்டி
ஆறுடன் கழித்த
- தொண்ணூற்று நான்கு
ஐம்பது நூறு - ஐயாயிரம்
ஐம்பால் குழல் - ஐந்து பகுப்பாகிய மயிர் முடி (கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள்)
ஐயர் - அந்தணர்
ஐயவி - வெண்சிறுகடுகு
ஐவர் - தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன்,
சகாதேவன், என்பவர்கள்
ஐவாய் - பாம்பு

மேல்

அகர வரிசை