முகப்பு

தொடக்கம்


நா உடன்று - நாக் குழறி
நாசி - பாடும்போது தோன்றும் மூக்கொலி
நாஞ்சில் - கலப்பை
நாட்டி - நாட்டமுடையாள்
நாடலர் - விரும்பாதவர்
நாண் தறி - நாணமாகிய தூண்
நாதம் - ஒலி
நாப்பண் - நடு
நாமம் - அச்சம்
நாரணன் நடித்த - திருமால் கூறிய
நால் நூல் - தொங்குகிற பூணூல்
நால் நூல்
மாக்கள்
- அந்தணர் (தொங்குகிற பூணூலை உடையவர்)
நாவலந் தண்
பொழில்
- நாவலந் தீவு, சம்புத் தீவு (பாரத நாடு)
நாவாய் - கப்பல்
நாள் - நல்நாள்
நாள் இழைத்து - வருநாளைக் குறித்துக் கூடல் இழைத்து
நாள் நிறைந்து - நெடுங் காலம்
நாள்பூ - அன்றலர்ந்த மலர்
நாற்றி - தொங்க விட்டு
நாறுதல் - தோன்றுதல், மணத்தல்
நாறு - நாற்று முடிகள்
நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், ஆகிய
  நான்கு வேதம்
நான்மறைப் பாலன் - (மார்க்கண்டன்) நான்கு வேதங்களில் வல்ல
  அந்தணச் சிறுவன்
நான்று - தாழ்ந்து
நான்றென்ன - பெய்ததுபோல
நானம் - புழுகு

மேல்

அகர வரிசை