வடிவு எடுத்து வேதம்
அன்பின் பாடிடவும்
மறிந்து அறியாவண்ணம் வைகும்
பொடி அணியும் திருமேனிப் புனிதன், மதுரைக்கு
இறைவன் புகழ்-இன் பாடல்,
நெடிய கவி, கல்லாடர், பொருள்-துறையை
நிகழ்த்துதொறும், திங்கள் சூடும்
முடி அசைத்து, 'நன்று நன்று ஈது' என மகிழும்
எனின், நிகரா மொழிவது யாதே?
|
1
|
|
|
செவ்வி
திகழ் பொகுட்டுச் செந்தாமரை வதனக்
கொவ்வை எழில் செவ் வாய்க் குறத்தேனை, நவ்வி
விழி யானையை, புணரும் வேளை--மதவெள்ளம்
பொழி யானையை--மனமே போற்று. |
2
|
|
|
வாய்ந்த
பொருட்கு ஒரு பொருளாய், கலைவாணிக்கு அருள்
கொழிக்கும்
மனமாய், பாரின்
ஆய்ந்த முது தமிழ் வடித்து, 'கல்லாடம்' என ஒரு நூல்
அருளியிட்டார்--
தேய்ந்த மதிச் சடைப் பரமர் கருணைபெற, சங்க முது
செல்வர் வாழ்த்த,
காய்ந்த புலன் அடக்கி, உயர் பெரு ஞானம் பழுத்தருள்
கல்லாடனாரே. |
3
|
|
|
கல்லாடர்
செய் பனுவல்-கல்லாடம் நூறும், நூல்-
வல்லார் சங்கத்தில் வதிந்தருளி, சொல் ஆயும்
மா மதுரை ஈசர் மனம் உவந்து கேட்டு, முடி
தாம் அசைத்தார் நூறு தரம். |
4
|
|
|