முகப்பு

சிறப்புப் பாயிரம்

தொடக்கம்


வடிவு எடுத்து வேதம் அன்பின் பாடிடவும்
     மறிந்து அறியாவண்ணம் வைகும்
பொடி அணியும் திருமேனிப் புனிதன், மதுரைக்கு
     இறைவன் புகழ்-இன் பாடல்,
நெடிய கவி, கல்லாடர், பொருள்-துறையை
     நிகழ்த்துதொறும், திங்கள் சூடும்
முடி அசைத்து, 'நன்று நன்று ஈது' என மகிழும்
     எனின், நிகரா மொழிவது யாதே?
1
   
செவ்வி திகழ் பொகுட்டுச் செந்தாமரை வதனக்
கொவ்வை எழில் செவ் வாய்க் குறத்தேனை, நவ்வி
விழி யானையை, புணரும் வேளை--மதவெள்ளம்
பொழி யானையை--மனமே போற்று.
2
   
வாய்ந்த பொருட்கு ஒரு பொருளாய், கலைவாணிக்கு அருள்
                                                             கொழிக்கும்
     மனமாய், பாரின்
ஆய்ந்த முது தமிழ் வடித்து, 'கல்லாடம்' என ஒரு நூல்
     அருளியிட்டார்--
தேய்ந்த மதிச் சடைப் பரமர் கருணைபெற, சங்க முது
     செல்வர் வாழ்த்த,
காய்ந்த புலன் அடக்கி, உயர் பெரு ஞானம் பழுத்தருள்
     கல்லாடனாரே.
3
   
கல்லாடர் செய் பனுவல்-கல்லாடம் நூறும், நூல்-
வல்லார் சங்கத்தில் வதிந்தருளி, சொல் ஆயும்
மா மதுரை ஈசர் மனம் உவந்து கேட்டு, முடி
தாம் அசைத்தார் நூறு தரம்.
4
 

 

மேல்