முகப்பு
கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக
மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்த
னேஉல(கு) ஏழும்பெற்ற
சீரபி ராமிஅந் தாதிஎப்
போதும்என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதி
யேநிற்கக் கட்டுரையே.