நலம்
வரும் வழி
நேரிசை
வெண்பா.
அம்மானைக்
கையமைத்தான் அக்காளை ஓடவைத்தான்
சும்மா
விருந்துமதற் சுட்டெரித்தான் - பெம்மான்
பதிக்கச்சி
மேய பரமன் பணிந்து
துதிக்கத்
தருவன் சுகம். (7)
|
(இ-ள்)
அம்மானை - (தாருகாவனத்து முனிவர்கள் செலுத்திய) அந்த மானை, கை யமைத்தான் - கையில்
எந்திக்கொண்டவரும், அக் காளை - அந்தத் திருமாலாகிய இடபத்தை, ஓடவைத்தான் -
ஓடும்படி செய்தவரும், சும்மா இருந்தும் - ஆலமர்செல்வனாக யோக நிலையில் அமர்ந்திருந்தும்,
மதன் - மன்மதனை, சுட்டு எரித்தான் - சுட்டெரித்தவரும், பெம்மான் - பெருமானும்,
பதிக்கச்சி மேய பரமன் - கச்சிப்பதியில் எழுந்தருளிய சிறந்தவருமாகிய ஏகாம்பரநாதரை,
பணிந்து துதிக்க - வணங்கித் துதிக்க, சுகம் தருவன் - சுகத்தைக் கொடுப்பர். அமைத்தானும்
ஓடவைத்தானும் எரித்தானும் பெம்மானும் ஆகிய பரமன், தன்னைப் பணிந்து துதிக்கச்,
சுகம் தருவன் என இயைக்க.
அம்மான், தாயோடு பிறந்தவன் என்றும், அக்காள், கூடப்
பிறந்தவள் என்றும் பொருள் தோன்றுதலும் காண்க. |