| 
 பாதகந்தரு 
 துன்பொழி வகை. கட்டளைக் 
 கலித்துறை.
 
 
 | சுகந்தரு 
 கச்சிப் பதிவந் தடியர் துயர்களைவோர் நகந்தரு மெல்லியற் 
 காம விழியிரு நாழிநெல்லால்
 உகந்தரு முப்பத் 
 திரண்டறம் ஓம்பச்செய் உத்தமர்பா
 தகந்தரு துன்பொழிப் 
 பார்பணி வீரவர் தாண்மலரே.             (8)
 |  (இ-ள்.) 
 சுகம் தரு - இன்பத்தைத் தருகின்ற, கச்சிப் பதி வந்து - திருக்கச்சிப் பதியில் 
 எழுந்தருளி, அடியர் துயர்களைவோர் - அடியார் துக்கங்களை ஒழிப்பவரும், நகம் தரு மெல்லியல் 
 காம விழி - மலையரையன் பெற்ற மகளாகிய மேன்மையான சாயலையுடைய காமாட்சி, இருநாழி 
 நெல்லால் - இரண்டு படி நெல்லாலே, உகந்து - மகிழ்ந்து உயர்ந்து, அரு - அரிய, முப்பத்து 
 இரண்டு அறம் ஓம்ப - முப்பத்திரண்டு அறங்களையும் செய்யும்படி, செய் உத்தமர் - செய்த 
 உத்தமரும், பாதகந் தரு - தாம் அடியார்க்குப் பாதகத்தைத் தருகின்ற, துன்பு ஒழிப்பார் 
 - துன்பத்தை ஒழிப்பவருமாகிய, அவர் தாள்மலர் - அந்த ஏகாம்பர நாதரின் திருவடித் 
 தாமரையை, பணிவீர் - வணங்குவீர் (எ-று.) காமக் 
 கண்ணியார் வேளாளர்க்கு இருநாழி நெல்லைக் கொடுத்து அதைக் கொண்டு நெல்லைப் பெருக்கி 
 உலகில் 32-அறம் செய்யும்படி உதவினர். பாதகம் தரு துன்பு (துன்பம்) ஒழிப்பார்; 
 அவர் தாள் மலரே பணிவீர் என இயைக்க. நகம் - போகாதது என்ற காரணப் 
 பொருளுடைய மலை. (உகப்பு 
 - தொல் - சொல். உரி, 3) உகந்து, உவந்து என்னும் பொருட்டு. |