| 
 கலிநிலைத் 
 துறை 
 
 
 | தீதறு 
 நூலுணர் தெள்ளிய சிந்தையர் மனமூடேகாதலின் 
 வாழே காம்பரர் முடியைக் காணவயன்
 ஏத முறக்கோ 
 எகினம் எனப்போய் முடிகாணா
 வேதனை 
 பெற்றோ வேதனை யுற்றாள் வெளியானாள்.           (18)
 |  (இ-ள்) தீது அறு - குற்றமற்ற, நூல் உணர் - நூல்களை உணர்ந்த, தெள்ளிய 
 சிந்தையர் - தெளிந்த கருத்தை உடையவரது, மனம் ஊடே - மனத்துள், காதலின் - விருப்பத்தோடு, 
 வாழ் - வாழ்கின்ற, ஏகாம்பரர் - ஏகாம்பரநாதரது, முடியைக்காண - தலைமுடியைக் காணும்படி, 
 அயன் - பிரமன், ஏதமுற - துன்பமுற, கோ - ஆகாயத்தில், எகினம் எனப்போய் - அன்னப்பறவையாய்ச் 
 சென்று, முடி காணா - முடியைக் காணாத, வேதனை - வேதப்பொருளாகிய சிவனை, பெற்றோ - 
 கூடியோ, வேதனை யுற்றாள் - துன்பப்பட்டிருந்த என் மகள், வெளியானாள் - வீட்டை விட்டு 
 வெளிச் சென்றாள்,  இஃது உடன் போக்கு. மனமூடு - ஊடு ஏழனுருபு, கோ - ஆகாயம், எகினம் - அன்னப்புள், 
 வேதனை - மறையின் வடிவாகிய சிவபெருமானை: பெற்றோ என் புழி, பெறுதல் கூடுதல், வேதனை 
 உற்றாள் - துன்பம் உற்றவளாகிய என் மகள் (வினையாலணையும் பெயர்). வேதனைப் பெற்றோ 
 எனற்பாலது வேதனை பெற்றோ என நின்றது செய்யுள் விகார மென்க. |