அறுசீர்
ஆசிரிய விருத்தம்
வெளிவீட்
டாரைக் காட்டாரை
வியன்மா வாரைச் சேவாரை
ஒளிவிட்
டோங்குங் கச்சியரை
உயர்மா மறையின் உச்சியரைக்
களியுற்
றாடுங் கூத்தாரை
அகிலம் அனைத்துங் காத்தாரை
அளியுற்
றினிது புணர்ந்திடுதற்
கநங்கன் செயலொன்
றிலைமானே. (19)
|
(இ-ள்)
வெளி வீட்டாரை - சிதாகாச முடையவரும், காட்டாரை - திருவாலங்காட்டில் ஆடுபவரும், வியன்மாவாரை - பெருமை வாய்ந்த மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரும்,
சேவாரை - இடபவாகனத்தை உடையவரும், ஒளி விட்டு ஓங்கும் - ஒளிப்பிழம்பாய் உயர்ந்து எழும், கச்சியரை - காஞ்சிபுரத்தை உடையவரும், உயர்மாமறையின் -
மிகச் சிறந்த வேதத்தின், உச்சியரை - உச்சியில் உள்ளவரும், களியுற்று ஆடும் - மகிழ்ச்சியுற்று ஆடுகின்ற, கூத்தரை - கூத்தை உடையவரும், அகிலம்
அனைத்தும் - உலகம் முழுதும், காத்தாரை - காத்தவருமாகிய ஏகாம்பரநாதரை, அளியுற்று - அன்புற்று, இனிது புணர்ந்திடுதற்கு - இனிதாய்ச் சேர்ந்திடுதற்கு,
அநங்கன் செயல் - மன்மதனது செய்கை. மானே - தோழியே, ஒன்றிலை - அவரிடத்தில் சிறிதும் இல்லை.
மா - மாமரம், சே - எருது, அநங்கன் - அங்கமில்லாதான் (உருவிலான் - மன்மதன்) மன்மதன் கச்சிப்பதியாருக்கு
இச்சை உண்டாக்கவில்லை. ஆதலின், அச்சிவபிரான் என்னை விரும்பவில்லை. தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது. மான் - மான்போன்றவளாகிய தோழி -
உவமை யாகுபெயர். |