| நேரிசை 
 வெண்பா
  
  
 
 | 
 
       
 கடுக்கைத் தொடைநயந்தேன் காதலுடை யார்யான்நடுக்கை 
 யுறுமா நயந்தார் - கொடுக்கைக்குச்
 செல்லே! 
 சிறந்தாய் திருக்கச்சி வாணர்பால்
 வல்லே 
 தொடையிரந்து வா.                            (42)
 |  
 (இ-ள்.)  
 கொடுக்கைக்கு - கொடைத் தொழிலுக்கு, செல்லே - மேகமே, சிறந்தாய் - நீ சிறப்புற்றாய், 
 ஆதலால், திருக்கச்சி வாணர்பால் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரிடத்துச் 
 சென்று, தொடை யிரந்து - மேலே கூறிய கொன்றைமாலையை வேண்டிப் பெற்று, வல்லே வா 
 - விரைந்து வா. நடுக்கை - நடுங்குதல். நடுக்கமுறும் விதம்: கொன்றை 
 மாலையைப் பெறாததால் துன்பம் உண்டாகும் விதம். கொடைத் தொழிலுக்கு உரிய மேகம்தான் கொடுத்தற்குரிய 
 நீரைக் கடலிலிருந்துகொள்ளுந் தொழிலிலும் வல்லமையையுடையதாதல் கண்டு, இறைவன்பால் 
 கொன்றைத் தொடையல் பெற்றுக்கொண்டுவருமாறு ஏவின நயம் பாராட்டற்குரியது. |