| வஞ்சித்துறை 
 
 | மாநீழல் 
 நல்லார்ஆனேறு தொல்லார்
 தேனேறு 
 சொல்லார்
 வானேறு 
 கல்லார்.                          (46)
 |  (இ-ள்.) 
 மா நீழல் நல்லார் - மாமரத்தின் நிழலின்கண் எழுந்தருளிய நற்குண நற்செய்கையை உடையாரே, 
 ஆன் ஏறு தொல்லார் - காளையை ஊர்தியாகக்கொண்டு ஏறுகின்ற பழைமையானவரும், தேனேறு 
 சொல்லார் - தேன்போலும் இனிமை பொருந்திய சொற்களை உடையவரும், வானேறு கல்லார் 
 - வானளவும் ஓங்கிய (வெள்ளி) மலையை உடையவரும் ஆவர். கச்சியம்பதியில் மாமரத்தின் நிழலில் கோயில்கொண்டு 
 எழுந்தருளியவரே, காளையை ஊர்தியாகக்கொண்டு இன்சொல் கூறி அடியாரை மகிழ்விக்கும் 
 கயிலையெம்பெருமான் ஆவார் என்பது கருத்து. 
 |