வஞ்சித்துறை
மாநீழல்
நல்லார்
ஆனேறு தொல்லார்
தேனேறு
சொல்லார்
வானேறு
கல்லார். (46)
|
(இ-ள்.)
மா நீழல் நல்லார் - மாமரத்தின் நிழலின்கண் எழுந்தருளிய நற்குண நற்செய்கையை உடையாரே,
ஆன் ஏறு தொல்லார் - காளையை ஊர்தியாகக்கொண்டு ஏறுகின்ற பழைமையானவரும், தேனேறு
சொல்லார் - தேன்போலும் இனிமை பொருந்திய சொற்களை உடையவரும், வானேறு கல்லார்
- வானளவும் ஓங்கிய (வெள்ளி) மலையை உடையவரும் ஆவர்.
கச்சியம்பதியில் மாமரத்தின் நிழலில் கோயில்கொண்டு
எழுந்தருளியவரே, காளையை ஊர்தியாகக்கொண்டு இன்சொல் கூறி அடியாரை மகிழ்விக்கும்
கயிலையெம்பெருமான் ஆவார் என்பது கருத்து.
|