நேரிசைச்
சிந்தியல் வெண்பா
மாவுடையான்
வெள்ளி மலையுடையான் எண்டிசையாம்
தூவுடையான்
நால்வேதச் சொல்லுடையான் - தாவிலறச்
சேவுடையான்
எங்கள் குலத் தே. (48) |
(இ-ள்.)
மா வுடையான் - மாமரத்தின் நிழலை இருப்பிடமாக உடையவன், வெள்ளி மலையுடையான் -
கயிலைமலையை இருப்பிடமாக உடையவன், எண் திசையாம் - எட்டுத் திக்குகளாகிய, தூ உடையான்
- தூய உடையை உடையவன், நால்வேதச் சொல்லுடையான் - நான்கு மறைகளாகிய சொற்களை
உடையவன், தா இல் அறம் சேவுடையான் - கெடுதலில்லாத தரும விடையை உடையவன், (யாவனெனில்),
எங்கள் குலம் தே - எங்கள் குலத் தெய்வம்.
தூய்மை உடை - தூ உடை; உடை - ஆடை.
மாவுடையான், மலையுடையான், தூவுடையான், சொல்லுடையான்,
சேவுடையான் என ஒரு பொருள்மேல் பல பெயர் வந்தடுக்கித் ‘தே’ என ஒரு
பெயர்கொண்டு முடிந்தன.
“தாவே வருத்தமும் கேடும் ஆகும்” என்பது (தொல்காப்பியம், உரியியல்.)
|