| கட்டளைக் 
 கலித்துறை  
  
  
 
 | தேறா 
 மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்துபின்னர்ஆறாத மும்மை 
 மலப்பிணி நீங்கநல் லாற்றினுய்ப்பர்
 மாறா வளக்கச்சி 
 மாநிழ லாரு வணன்றனக்குப்
 பாறா தரவம் 
 அணிந்தவர் பேரருள் பாடுதுமே.                   
 (55)
 |  (இ-ள்.) மாறா 
 வளம் கச்சி - மாறுபடாத வளங்களையுடைய காஞ்சி நகரத்தில், மா நிழலார் - மாமரத்தின் 
 நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரும், தேறா மனத்தை - தெளியாத என் மனத்தை, திருப்பி 
 - (பொறி வழிகளில் செல்லாவண்ணம்) திருப்பி, தெளிவுறச் செய்து - தெளிவு அடையச் 
 செய்து, பின்னர் - பிறகு, ஆறாத - நீங்காத, மும்மை மலப் பிணி - ஆணவம், மாயை, 
 கன்மம் என்னும் மூன்றாகிய மலநோய், நீங்க - ஒழியும்படி செய்து, நல் ஆற்றி னுய்ப்பர் 
 - நல்ல வழியில் செலுத்துபவரும், உவணன் தனக்கு - கருடனுக்கு, பாறாது - அழிவு அடையாதபடி, 
 அரவம் அணிந்தவர் - பாம்பை அணிந்தவருமான சிவபெருமானது, பேரருள் பாடுதும் - பெருமை 
 வாய்ந்த அருளைப் பாடுவோம். சிவபிரான் அணிந்த பாம்பு கருடனுக்கு அஞ்சாது.  சிவபிரான் 
 சடையில் இருக்கும் பாம்பு ‘ஏன் கருடா நலமா?’ என்று கேட்கும் என்பது பழமொழி. (காஞ்சிப்புராணம், 
 மணிகண்டீச்சரப்படலம்.) 
 “பலியேல் - கடவுள் அவிர்சடைமேல் கட்செவி அஞ்சாதே, படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து” 
 என்பது நோக்குக. |