| கட்டளைக் 
 கலித்துறை 
  
  
 
 | போதவித் 
 தேபுக லேயற வோர்க்குநம் புந்தகையார்தீதவித் தேற்குநற் 
 செவ்விய னேபுலத் தெவ்வடர
 வேதவித் தேமிக 
 வேசறு வேற்கு விரைந்தருணீங்
 காதவித் தேன்சுர 
 ருண்கச்சி வாழன்பர்க் கண்ணியனே.           (61)
 |  
 (இ-ள்.) 
 போத வித்தே - ஞானப் பயிர் தழைவிக்கும் விதையே, அறவோர்க்கு புகலே - அறநெறியில் 
 நிற்போர்க்குச் சரணே (அடைக்கலப் பொருளே), நம்புந் தகையார் - நின்னை விரும்பும் 
 தகுதி உடையாரது, தீது அவித்து - தீமையை ஒழித்து, ஏற்கும் - அவர்களை ஏற்றுக்கொள்ளும், 
 நற் செவ்வியனே - மிக்க செம்மை நலம் வாய்ந்தவனே!,வேத வித்தே - வேதத்திற்கு 
 மூலகாரணனே!, புலத்தெவ் - ஐம்புலன்களாகிய பகைவர், அடர - என்னோடு போர் செய்தலால், 
 மிக வேசறு வேற்கு - மிக்க அயர்ச்சியால் மயர்வு மிக்கு, நின்னை யடைந்த எனக்கு, 
 விரைந்து அருள் - விரைந்தருள்வாய், நீங்காது - நீங்காமல், அவி தேன் - வேள்வி 
 யுணவாந் தேனைக் கொண்டு, சுரர் உண் - உம்பர்களை உண்பிக்கின்ற, கச்சி வாழ் - 
 காஞ்சியில் வாழ்கின்ற அன்பர்க்கு, அண்ணியனே - அன்பருக்கு நெருங்கி அருள் செய்பவனே!் அன்பர்க்கு அண்ணியனே அருள் என இயையும். ‘அன்பர் கண்ணியனே’ என்று பிரித்து, ‘அன்பரைப் பெருமைப்படுத்துபவனே’ 
 என்று பொருள் கூறினும் அமையும். இப்பொருள் கொள்ளுங்கால் மோனை இன்பம் ஆய பயனுள்ளது. 
 வேசறல் - இளைப்புற்றுத் தாழ்ந்திருத்தல். (திருவா. கோயில் மூத்த திருப்பதிகம், 
 5 பார்க்க.) அடர்தல் - போர் செய்தல். ‘எண்ணுறு படைகளிவ்வா றெதிர்தழீஇ யடரும் வேலை’ (கந்தபுரா. 
 தாரக. 39) அவி தேன் சுரர் உண் கச்சி வாழன்பர் - அவிசாகிய 
 தேன் கொண்டு தேவர்களை உண்பிக்கின்ற கச்சிப்பதியில் வாழும் அன்பர், உண் அன்பர் 
 என இயைந்து பிறவினைப் பொருள்படும் வினைத்தொகையாம். ‘தெவ்வுப் பகையாகும்’ - தொல். 
 உரியியல்.  ஈண்டுத் தெவ்வென்னுஞ் சொல் பண்பாகு பெயராய்ப் பகைவர்களை உணர்த்திநின்றது. ‘நம்பும் மேவும் நசையா கும்மே’ 
 - தொல்காப்பியம். உரி. எனவே, ஈண்டு நம்பும் தகையார் என்பதற்கு, விரும்பும் தகுதியுடையார் 
 என்று பொருள் கூறப்பட்டது. போத வித்தே! புகலே! செவ்வியனே! 
 வேத வித்தே! நீங்காது அவித்தேனை சுரர் உண் கச்சிவாழ் அன்பர்க்கு அண்ணியனே விரைந்தருள் 
 என முடிக்க. |