| 
 இன்னிசை 
 வெண்பா  
  
  
 
 | இன்படைய 
 வேண்டின் இகலற்க - வன்பிறவித்துன்பொழிய 
 வேண்டினவந் துன்னற்க - அன்புருவாம்
 போதனருள் வேண்டுமெனிற் 
 பொய்யற்க - சூதகலச்
 சூதநிழ லான்கழலைச் 
 சூழ்.                        (69)
 |  (இ - ள்.) 
 இன்பு அடைய வேண்டின்-இன்பத்தை அடைய விரும்பினால், இகலற்க - பிறரிடத்து மாறுபாடு 
 கொள்ளற்க, வன் பிறவித் துன்பு - நீக்குதற்கரிய வலிமையையுடைய பிறப்பின் துன்பம், 
 ஒழிய வேண்டின் - ஒழிய விரும்பினால், அவம் துன்னற்க - (வீட்டு நெறிக்குக் கேடுதரும்) 
 பாவச்செயலைச் செய்யற்க, அன்பு உருவாம் - அன்பே வடிவமாகிய, போதன் - மெய்யறிவுருவனாஞ் 
 சிவபிரானது, அருள் வேண்டு மெனில் - அருள் வேண்டுமே ஆனால், பொய்யற்க - பொய் பேசாது 
 ஒழிக, சூது அகல - வஞ்சகம் நீங்க, சூதம் நிழலான் - மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும் 
 ஏகாம்பரநாதரது, கழலை - கழலணிந்த திருவடியை, சூழ் - எண்ணுக. அன்புருவாம் போதன் - அன்பே வடிவாகிய (மெய்யுணர்ந் 
 தோரால்) தெளியப்படுபவன். (போதம் - தெளிதல்.) நெஞ்சு - முன்னிலை எச்சம். ‘சூழ்க’ என்பது ‘சூழ்’ என விகாரமாயிற்று. இகலென்ப எல்......பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் 
 நோய் ஆதலால் ‘இகலற்க’ என்றார். 
 கழல், தானியாகுபெயராய்த் திருவடிகளை யுணர்த்தி நின்றது. வியங்கோளெல்லாம் வேண்டிக்கோடற்பொருளில் 
 வந்தன; விதித்தற்பொருளில் வந்தனவெனவும் கொள்ளுப. |