| 
 கலிநிலைத்துறை 
  
  
 
 | பச்சைநி 
 றப்பைந் தொடிவல மேவிய பசுபதியுள்நச்சின ரொன்றினும் 
 எச்சமு றாதருள் நனிகூர்வான்
 கச்சியு றைந்தருள் 
 கண்ணுதன் மறலிக் கண்டகனால்
 அச்சமு றாதடி 
 யவர்முனம் அந்தத் தணுகுவனே.             (71)
 |  
 (இ - ள்.) 
 பச்சை நிறம் பைந் தொடி - பசிய நிறத்தையுடைய பார்வதி, வலம் மேவிய - தன் இடப்பக்கத்தே 
 விரும்பியுறையத் தான் அவள் வலப்பக்கத்தே விரும்பி யுறைதலைப் பொருந்திய, பசுபதி 
 - உயிர்களுக்குத் தலைவன், உள் நச்சினர் - தன்னை மனத்தில் எழுந்தருள வேண்டும் என 
 விரும்பி வழிபாடு செய்தவர், ஒன்றினும் - அவ்விருப்பத்தில் சிறிதும், எச்ச முறாது-குறைவு 
 அடையாது, நனி அருள் கூர்வான் - அவருள்ளத்தே எழுந்தருளிச் சாலவும் அருள் செய்பவனாய், 
 கச்சியு றைந்தருள் கண்ணுதல் - காஞ்சியில் எழுந்தருளும் நெற்றிக் கண்ணனாகிய ஏகாம்பரநாதன் 
 ஆவான், மறலிக் கண்டகன் - அவன் எமனுக்கும் எமனாவன், ஆல் - ஆகையால், அச்சம் உறாது 
 - அச்சம் உறாது - அச்சம் அடையாதபடி, அடியவர் முனம் - அடியவரிடத்து, அந்தத்து - (எமன் 
 உயிரைப் பற்ற) இறக்கும் நேரத்தில், அணுகுவன் - அடைந்து அவ் வெமனிடமிருந்து அவரை 
 விடுவித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளுவான். இனி, அருள் மிகுதியும் செய்யும் பொருட்டுக் கச்சியுள் 
 உறையும் நெற்றிக்கண்ணன் எனினும் பொருந்தும். பைந்தொடி - பசும் பொன்னாலாகிய வளையலணிந்த பார்வதி 
 (பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.) மேவுதல் - விரும்பி யுறைதல். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ 
 என்பது தொல்காப்பியம். பார்வதி இடப்பாகத்தை விரும்ப அங்ஙனமே தந்த இறைவன், 
 தன்னை நச்சினர் உள்ளெழுந் தருளவேண்டின் அங்ஙனமே எழுந்தருளிக் காப்பான்.  அவன் 
 உள்ளிருக்குங்கால், எமன்வரின், அவன் காலகாலனாதலால் அவனிடமிருந்து காத்துத் தன்னடிகளில் 
 சேர்த்துக்கொள்ளுவான் என்க. |