கட்டளைக்
கலித்துறை
கணங்கொண்ட
பாசத் தொடரறுத் துய்யுங்
கருத்துடையீர்!
மணங்கொண்ட தண்டலை சூழுந் திருக்கச்சி
மாநகர்வாழ்
நிணங்கொண்ட சூற்படை நின்மலன்
தாளை
நிதந்தொழுவீர்
பணங்கொண்ட பாம்பின் விடங்கொண்ட
கண்ணியர்
பற்றஞ்சியே.
(87) |
(இ - ள்.)
கணம் கொண்ட - கூட்டமாக உள்ள, பாசத் தொடர் அறுத்து - பாசமாகிய சங்கிலியை அறுத்து,
உய்யுங் கருத்துடையீர் - பிழைக்கும் எண்ணம் உடையவர்களே, மணங்கொண்ட - வாசனை வீசப்பெற்ற,
தண்டலை சூழ் - சோலை சூழ்ந்த, திருக்கச்சி மாநகர் வாழ் - அழகிய காஞ்சிமாநகரத்தில்
வாழ்கின்ற, நிணங் கொண்ட - கொழுப்புப் பூசப்பெற்ற, சூற் படை - சூலாயுதத்தை உடைய, நின்மலன் தாளை - நின்மலராகிய
ஏகாம்பரநாதரதுத் திருவடியை, பணங் கொண்ட - படத்தைக் கொண்ட, பாம்பின் - பாம்பினது,
விடம் கொண்ட - விடம் போன்ற, கண்ணியர் - கண்களை உடைய மாதரது, பற்று அஞ்சி-ஆசைக்குப்
பயந்து, நிதம் தொழுவீர் - நாள்தோறும் வணங்குவீர்களாக.
‘கருத்துடையீர்! கச்சிமாநகர்வாழ் நின்மலன் தாளைக்
கண்ணியரது பற்று அஞ்சியே நிதந் தொழுவீர்’ என முடிக்க.
சூல்-சூலப்படை; சூலாயுதம். சூலம் என்பது அம் கடைக்
குறையாய், சூல் என நின்றது. |