|   ஊர் நேரிசை 
 வெண்பா  
  
 
 | தெரிந்தார் மலர்த்தடத்தின் தெண்ணீர் 
 துலைக்கோல்பரந்தாழுங் கச்சிப் பதியே - கரந்தாழ்வெண்
 மாதங்கத் தானத்தன் வாரிசத்த னேடரிய
 மாதங்கத் தானத்தன் வாழ்வு.                         (93)
 |  (இ - ள்.)  
 தெரிந்து - (வண்டுகள் தேனை) ஆராய்ந்து, ஆர் -உண்ணுதற்கு இடமாகிய, மலர்த் தடத்தின் 
 தெண்ணீர் - பூக்களை உடைய பொய்கையின் தெளிந்த நீர், துலைக் கோல் - ஏற்ற மரத்தின்கண், 
 பரம் - பாரமாய், தாழும் - தாழ்ந்து ஓடும், கச்சிப் பதியே - கச்சிப் பதியே, கரம் 
 தாழ் - தும்பிக்கை தொங்குகின்ற, வெண் மாதங்கத்தான் - வெள்ளை யானையை ஏறிச் 
 செலுத்தும் இந்திரன், நத்தன் - சங்கேந்திய திருமால், வாரிசத்தன் - தாமரையில் 
 இருக்கும் பிரமன், தேட அரிய மாது அங்கத்தான் - ஆகிய இவர் தேடுதற்கு அரிய உமையைத் 
 தன் உடம்பின் (இடப்பாகத்தில்) கொண்டவனாகிய, அத்தன் - தலைவன், வாழ்வு - வாழுமிடமாம். நான்காம் அடி, மா - சிறந்த, தங்கத்தான் - பொன் 
 மலையாகிய மேருவை (வில்லாக) உடையவன் எனினுமாம். துலைக்கோல் பாரந் தாழும் கச்சிப்பதி என்றமையால், 
 நீர்வளமுடைய பதி எனக் குறிப்பிக்கலாயிற்று. மற்ற வளம் குறிப்பிக்காமலே அமையும். |