பிழம்புகளும் மறைந்த காலங்கள் ஐயமறத் தெரிகின்றன. இவர் ஆசிரியராகிய சிவஞான முனிவர் சிவத்தொடு கலந்த காலம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத் தெழுநூற்றெட்டு விசுவாவசுயாண்டுச் சித்திரைத் திங்கள் எட்டாம்நாள் திங்கட் கிழமை ஆயிலிய நாள் (கி பி - 1784) என்று கூறுப. இதனை, சிவஞானமுனிவர் திருவாய் மலர்ந்தருளிய "செங்கழுநீர்ப்பிள்ளையார்" பிள்ளைத்தமிழ் என்னும் நூலிற் பாயிரத்தில் வருஞ் செய்யுளாலறிக. அது வருமாறு :- | "இலகுசக னீரெட்டு நூற்று நாற்பத்தேழி | | னிற்கரங் கும்பமிருபத் | | தேழிரே வதிவெள்ளி பூர்வபக் கத்துதியை | | யேர்க்கவுல வுஞ்சுப்பிரம் | | கலவியுறு சுபதினங் கன்னிலக் கினமதிற் | | கலைசைப் பதிக்குள் வாழ்செங் | | கழுநீர் விநாயகர்த மீதுபிள் ளைத்தமிழ்க் | | கவிபாடி வானோ ருண | | அலைமலிகடற் கடைந் தமிழ்தூட்டு மாலென்ன | | வவனியிற் புலவர் செவியா | | லார்ந்திடத் துறைசைவாழ் சிவஞான தேசிக | | னரங்கேற்றி னானாதலால் | | நலசுகுண மணிகுவளை யணிபுயன் வீரப்ப | | னல்குமக ராசயோக | | னங்கள்கே சவபூப னனுசர்சேய் சுற்றமு | | நன்மைதரு வாழ்வுறுகவே" |
என்பது. இனி இத்தணிகைப் புராண ஆசிரியராகிய கச்சியப்பமுனிவர் சிவத்தொடு கலந்த காலம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தெழு நூற்றுப் பன்னிரண்டு சாதாரணயாண்டு, சித்திரைத் திங்கள் பதினொன்றாம்நாள், செவ்வாய்க்கிழமை புனர்பூசநாள் (கி. பி - 1788) என்று கூறுப. இதனை | "ஏர்தரு சாலி வாகன சகாத்தம் | | ஆயிரத் தெழுசதத் தொருபத் | | திரண்டின்மேற் சாதா ரணவரு டத்தில் | | இயைதகு சித்திரைத் திங்கள் | | சார்தரு தேதி பத்தினோ டொன்று | | தருசெவ்வாய் வாரம்பூருவத்தில் | | சத்தமி புனர்பூ சத்திரு நாளில் | | தவலறு கும்பலக் கினத்திற் |
|