திருக்கயிலாய பரம்பரைப் பொம்மைய பாளையம் பெரியமடம், திருமயிலம் தேவத்தான ஆதீன பரம்பரைத்
தர்மகர்த்தத்துவம் பதினெட்டாம் பட்டம்.
ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய
சுவாமிகள்
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருவடி வாழ்க. “ எங்கும் நிறைந்த சிவபெருமான் குரு வடிவிலும்
இலிங்க வடிவிலும் அடியார் வடிவிலும் வெளிப்படுவார்; அம்மூன்று வடிவங்களையும் கடவுளாகவெ
கொண்டு வழி பட்டால் முத்திப்பேறு அடையலாம் “ என்பது சாத்திரம், அம்மூன்று வடிவங்களையும்
தனித் தனிப் பற்றுக் கோடாகக் கொண்டு வழிபட்டு முத்தியடைந்தவர்கள் சைவ நாயன்மார்களாவர்.
அந்நாயன்மார்களை வழிபட்டு அவர்களின் வரலாறுகளைப் ‘பெரிய புராணம் ‘ என்ற நூல் வாயிலாக
உலகுக்கறிவித்து முத்தியடைந்தவர் ஸ்ரீ சேக்கிழார் பெருமானாவார். இன்று சைவம் நிலைத்திருக்கிறது
என்றால் அஃது அப்பெருமானாராலேயாம். எங்கள் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகளைப்பற்றி ஸ்ரீ சிவப்பிரகாச
சுவாமிகள், சொல்லும்போது, “ அருந்தமிழ் நாடு ஒரு கோடி தவம் செய டவந்து அதிர்
வெள்ளருவி தூங்கு உயர் மயிலை வரையின் அமர் விளக்கு “ என்றார். அப்படியே நாம், “ மேன்மை
கொள் சைவம் செய்த தவப்பயனாகச் சேக்கிழார் அவதரித்தார் “ என்னலாம்.
ஸ்ரீ சேக்கிழாரைப்பற்றி முழுதும் உணர்ந்தவர் திருவாவடுதுறை யாதீன மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள். அப்பெருமானின் பெருமைகளெல்லாம் உலகுக்குத் தெரியும்படி ‘சேக்கிழார்
சுவாமிகள் பிள்ளைத்தமிழ் ‘ எனும் நூலைப் பாடினார்கள் , பிள்ளையவர்கள் தம் புலமை
நலம் முழுமையும் காட்டிப் பாடிய அந்நூலின் பொருளைப் புலமையுடையோரே அறிய முடியும். அதனால்
அந்நூலுக்கு உரை வருவது வேண்டுவதே. அப்பணியினைச் செந்தமிழ்ச் செல்வரும், சைவ சமய சிரோமணியும்
பேராசிரியருமான வித்துவான், பாலூர் - கண்ணப்ப
முதலியார் எம்.ஏ.,
|