நூற்பயன் |
வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர்
குறைவிலா தவரே.
|
(பதவுரை) |
கொற்கை -
கொற்கை யென்னும் நகரை, ஆளி - ஆள்பவனும், குலசேகரன் -
தன்குலத்திற்கு முடி போல்பவனும் ஆகிய, வெற்றி வேல் கை -
வெற்றி பொருந்திய வேலினை யேந்திய கையையுடைய, வீரராமன் -
அதிவீரராம பாண்டியன், புகல் - சொல்லிய,
நல் தமிழ் தெரிந்த - நல்ல தமிழில் விளக்கமுற்ற,
நறுந்தொகைதன்னால் - நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலால்,
குற்றம் களைவோர் - குற்றத்தைப் போக்குவோர், குறைவு இலாதவர் -
சிறுமை இல்லாதவராவர் (எ - று.) |
|
|
(பொ-ரை) |
கொற்கை நகரதிபனும் குலத்திற்கு மகுடம் போன்றவனுமாகிய
அதிவீர ராமபாண்டியன் கூறிய நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலைக்
கற்றுக்குற்றத்தைப் போக்கிக் கொள்வோர் ஒரு குறையும் இல்லாதவராவர் (எ - று.)
நறுந்தொகை யென்பதற்கு நல்ல நீதிகளைத் தொகுத்திருப்பது
என்பது பொருள். இதுவே இந்நூலின் பெயர். இச்செய்யுளின் முதலில் 'வெற்றிவேற்கை'
என்னுந்தொடர் இருத்தலால், அதனாலும் இந்நூலை வழங்குவர். ஏ - ஈற்றசை.
|
|