1
பதிப்புரை

அன்பார்ந்த தமிழ் வாசகப் பெருமக்களுக்கு ஸ்ரீ செண்பகாவின்
வணக்கமும், நல்வாழ்த்துக்களும்.

கவிமணி அவர்களின் வெளிவராத     படைப்புக்களை கடந்த
ஆண்டுகளில் இரண்டு நூல்களாக    வெளியிட்டுள்ளோம். இப்போது
கவிமணியின் ‘ஒட்டு மொத்தக் கவிதைகள்     அனைத்தையும் ஒரே
தொகுப்பாக, பேராசிரியர்கள் டாக்டர் அ.க.பெருமாள் மற்றும் டாக்டர்
எஸ்.ஸ்ரீகுமார் அவர்களால் தொகுக்கப்பெற்று    அதை முழு நூலாக
வெளியிடும் வாய்ப்பை எங்களுக்குத் தந்துள்ளனர்.    அவர்களுக்கு
எங்கள் நன்றி. அதைப் போலவே இந்த     தொகுப்பு முழுவதையும்
தனது பல்வேறு பணிகளுக்கு இடையேயும்       படித்து நல்லதொரு
அணிந்துரை நல்கிய தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக்கழகத்துணை வேந்தர்
டாக்டர் இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் தெ.தி.     இந்துக் கல்லூரி
முன்னாள் முதல்வர் டாக்டர் தே.வேலப்பன் அவர்களுக்கும்  எங்கள்
நன்றி உரியதாகும். வழக்கம்போல் எங்கள்   வெளியீடுகளை வாங்கி
நல்லாதரவு தருகின்ற     தமிழ் வாசகப் பெருமக்களுக்கும் எங்களது
அன்பையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதிப்பகத்தார்.