தமிழர் வளர்த்த அழகு கலைகள்
|
தமிழையே வணிகமாக்கித்
தன் வீடும் மக்கள்
சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ்முத லாக்கிக்
கொண்ட
பல்கலைத் தலைவன்
எல்லாம்
தமிழ்ச்சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார்
என்பேன்.
அஞ்சுதல் அறியா நெஞ்சன்
அகல்வர லாறனைத்தும்
மிஞ்சுதல் இன்றிக்
கற்றோன்.
மேம்படும் நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத்துலக்க
கேண்மையோ டுயர்வு
செய்வான்.
எஞ்சுவ துமக்கொன்றுண்டோ
இவனை நீர் மறந்து
விட்டால்? |
- தமிழ்நிலம்
(14-10-52)
| | |