வடக்கே
தெற்கே ஒட்டி,
வலது
புறம் மூரி வச்சு
மூரி
ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி
பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,
ஒடு முத்தும்
தேங்காயை
ஒடைக்கறமாம்
பிள்ளையார்க்கு,
குலை
நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும்
ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி
பிள்ளையார்க்கு!
|